அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்

 Image may contain: 13 people, people sitting

ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்?

அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை

ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை சீண்டிவிட்டு ஆடியவன், அவனுக்கு புலிகளும் எதிரி , இந்தியாவும் எதிரி

ஆனால் இருவரையும் மோதவிட்டு இந்தியாவினை ஓரங்கட்டி , பின் புலிகளை எப்படி ஒழிக்கவேண்டும் என அஸ்திவாரம் எழுப்பியவனும் அவனே

புலிகள் வீரர்கள், மானமுள்ளவர்கள், பழிவாங்குவதில் சூரர்கள் என்றால் ஜெயவர்த்தனேவினை கொன்றிருக்கவேண்டும் செய்தார்களா?

அட அதன் பின்னாவது கோத்தபாய, மஹிந்த என தொட்டார்களா?

புலிகள் என்பது யார்? தனக்கு பிடிக்காதவர்களை அவர்கள் எதிர்பாரா நேரத்தில் நம்ப வைத்து அடித்து கொல்லும் கூட்டம்

ராஜிவ், பிரேமதாசாவினை அப்படித்தான் கொன்றார்கள், விழிப்பாக இருப்பவன் பக்கம் செல்ல கூட மாட்டார்கள்

அதுவும் ஜெயவர்த்தனே போல அமெரிக்க விசுவாசி என்றால் அவன் பக்கமே செல்லமாட்டார்கள், அதுதான் புலிகள்

ஒருசிலர் இன்று அமைதிபடை , பழி என என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றான்

அப்படி மானமுள்ள புலி ஏன் ஜெயவர்த்தனே பக்கம் செல்ல கூட இல்லை என பதில் கேள்வி கேட்டால் பதிலே இல்லை

அமைதிபடையினை வரசொல்லி கேட்டதே ஜெயவர்த்தனே தான், அவன் மகாராஜா போல வாழ்ந்து நிம்மதியாக செத்தான்

ஏன் புலிகள் ஜெயவர்த்தனேவினை கொல்லவில்லை என எவனாவது மலையாள மந்திரவாதியினை பிடித்து, பிரபாகரன் ஆவியினை துப்பாக்கி முனையில், சயனைடு குப்பியில் வரவழைத்து கேட்டால் தான் உண்மை தெரியும்..

இப்படியான கோணங்கள் எல்லாம் சீமானிய அடிப்பொடிகளிடம் இல்லை, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலைஞர் ஒழிக…

சிதறி செத்திருக்க வேண்டியவன் ஜெயவர்த்தனேவே தவிர ராஜிவ் அல்ல, இதுதான் உண்மை

வரலாறு இப்படி இருக்க சிலர் இன்று குதித்துகொண்டிருக்கின்றான்

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்