அவனுகளும் அவனுக மானமும்

இளையராஜா தன்மானமில்லாத தலித், அவர் மானத்தை விட்டுகொடுத்து சினிமாவில் நிலைத்தார். தன்மான தலித்தை அங்கு வளரவிடமாட்டார்கள்

இப்படி ஒரு தன்மான தலித் கூட்டம் சினிமா உலகில் சுற்றி திரிகின்றது என்கின்றன செய்திகள்

அதுபற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை, ஆனால் எம்.ஆர் ராதா திரையுலகம் பற்றி சொன்னது நினைவிருக்கின்றது

“டேய், அது கூத்தாடி உலகம். மானம் வெட்கம் ரோஷம் உள்ளவன் அங்க இருக்கமுடியாது, சுத்த மானம்கெட்ட தொழில் ஒன்னு உண்டுண்ணா அதுதான் கலை

நாடகம் நடிப்போம் முடியும்பொழுது கதாநாயகன் சாவணும், அதுக்கு பிறகுதான் மணியகாரன் வருவான். அவனுக்காக ஒருதடவ திரும்ப நடிச்சி சாகணும்

அப்புறம் நாட்டாம வருவான் அவனுக்கு சாகணும், ஜமீன் வந்தா அவனுக்கு சாகணும்

சினிமா மட்டும் என்ன வாழுதுண்ணு நினைக்கிற, பூரா அசிங்கம் ஆபாசம் மானங்கெட்டதனம், அங்க இருக்கிற ஒவ்வொரு பய பேக்ரவுண்டும் எனக்கு தெரியும், என் பேக்ரவுண்டும் எல்லா பயலுக்கும் தெரியும் இதுல ஒண்ணும் ரகசியமில்ல‌

அங்க இருக்குறவன் எல்லாம் கலைச்சேவை செய்ய வந்தாண்ணு நினைக்கிறியா? பூரா பொழைக்க வந்த பய, அவன் பொழைப்புக்கு என்னவெல்லாமோ செய்வான்

பூரா அசிங்கம், ஆபாசம், திருட்டுதனம் சம்பாதிக்கிற பணத்துக்கு வரி கூட ஒழுங்கா கட்டமாட்டானுக என்னை மாதிரியே..

அதான் சொல்றேன் அந்த மானங்கெட்ட பய உலகத்துல இருந்து அரசியலுக்கு ஆள் எடுக்காதே அது ஆபத்து, தன்மானமே இல்லாத பய எப்படி நல்லாட்சி கொடுப்பான்

மானமும் அறிவும் இல்லாத கூட்டம் கூத்தாடி கூட்டம். இரண்டும் இருக்குறவன் அங்கே இருக்கமாட்டான்”

மகான் எம்.ஆர் ராதா அப்பட்டமாக இப்படி சொல்லியிருக்க பலருக்கு தன்மானம் சிக்கலாம்.

யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை? , தன்மான சிங்கங்களுக்கு கூத்தாடிகள் உலகில் என்ன வேலை?

அவனுகளும் அவனுக மானமும்