அவனே அயோக்கியன்

கிறிஸ்தவர்கள் ரத்தசாட்சியாக சாவது ஒன்றும் புதிதல்ல‌

அவர்கள் ஜெருசலேமில் செத்தார்கள், சிரியாவில் செத்தார்கள், துருக்கியில் செத்தார்கள்

அதுவும் டயொகிளிசியவும், நீரோவும் அவர்களை கொடுமைபடுத்தி கொன்றவிதம் ஹிட்லர் அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்

2000 வருட கிறிஸ்தவ வரலாறு முழுக்க ரத்தமே சுவடாக கிடக்கின்றது

தமிழகத்தை எடுத்தாலும் அதுவே, தோமையார் பரங்கிமலை வரவில்லைதான் ஆனால் ஒரு கிறிஸ்தவன் அங்கே கொல்லபட்டிருக்கின்றான்

ராமநாதபுரத்தில் அருளாந்தர் எனும் துறவி தலைவெட்டபட்டு கொல்லபட்டிருக்கின்றார்

ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் பிள்ளை என்பவர் வரலாறு மணியாய் ஒலித்து சொல்கின்றது

ஆம், கிறிஸ்தவர்கள் இங்கு சாவது ஒன்றும் புதிதல்ல 500 வருடமாக நடக்கும் ஒரு விஷயம், வரலாறுகள் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை உண்டு

ஆனால் அன்றெல்லாம் அமைதி ஏன்?

முதலில் மன்னனுக்கு பயம், அதன் பின் வெள்ளையன் என்ற ரகசிய ஆதரவு

இப்பொழுது மக்களாட்சி அல்லவா? மறுபடி இதோ கிரகாம் ஸ்டெயின்ஸ், இதோ கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து என கிளம்பிவிட்டார்கள்

தேர்தல் என்றால் இதை எல்லாம் சொல்லிகொண்டிருப்பது சுத்த அயோக்கியதனமும் இடுகட்டிய தந்திரமுமாகும்

இங்கு தோமையாரின் சீடன் பரங்கிமலையில் கொல்லபட்டதில் இருந்து , தடியதேவனால் கொல்லபட்ட அருளானந்தர், தேவசகாயம் பிள்ளை போன்றோரின் தொடர்ச்சிதான் ஸ்டெயின்ஸ்

ஆனால் ஸ்டெயின்ஸை மட்டும் அரசியலாக்குவதில்தான் கிறிஸ்தவ தந்திரம் இருக்கின்றது

ரத்தம் சிந்தி தியாகத்தில் வளர்ந்ததுதான் கிறிஸ்தவம், அவ்வகையில் ஸ்டெயின்ஸை நினைத்து பெருமை அடையலாம், கடவுளுக்காக செத்த நல்ல கிறிஸ்தவன் அவன்

தன் கணவனின் கொலையாளியினை மன்னித்த கிளாராவும் நல்ல கிறிஸ்துவச்சியே

அதை வைத்து அரசியல் செய்கின்றான் அல்லவா? அவனே அயோக்கியன்