அவரவர் உணவு அவரவர் உரிமை

“வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியில் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர்..”

இந்த சங்க‌ பாடலின் பொருள் என்னவென்றால், தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் – தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து – கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் – உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட – அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாயிருந்தது

அதாவது பசுவினை தெய்வத்திற்கு தமிழகத்தில் பலியிட்டிருக்கின்றார்கள்

பசுவாவது பரவாயில்லை அடுத்த பாடல்தான் அலற வைக்கின்றது

“கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் – தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு…”

ஆம் பார்பணர் எனப்படும் பிராமணரும் உடும்புகறி உண்டார்கள் என்கின்றது இன்னொரு பாடல்

சும்மா அல்ல, நாய் வாயில் இருந்தாலும் பரவாயில்லை என பறித்து உடும்பு கறியினை உண்டார்களாம்..

ஆக தமிழர் எல்லா வகை உணவினையும் கலந்து கட்டி அடித்த இனம் என்பது தெரிகின்றது, உணவுக்கு பெயர் போன மாநிலத்தில் மாட்டுக்கறிக்கான சர்சையினை ஏற்றுகொள்ள முடியாது

அவரவர் உணவு அவரவர் உரிமை

யாரையும் இதைமட்டும் உண் என எப்படி சொல்லமுடியாதோ அப்படி இதை எல்லாம் உண்ணாதே என சொல்லவும் முடியாது