அவரவர் நினைத்தபடி எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்

எல்லோரும் அவரவர் நினைத்தபடி எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்

நீங்கள் நினைத்தபடியெல்லாம் நான் என் பக்கத்தில் எழுத உங்களுக்கு எதற்கு முகநூலில் வீணாக ஒரு பக்கம்?

அவர்களுக்கெல்லாம் சொல்லிகொள்வது ஒன்றுதான், உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொடுத்துவிடுங்கள், உங்கள் அக்கவுண்டில் நுழைந்து உங்களுக்காக எழுதிவிடுகின்றேன்


டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயருகிறது: தமிழக அமைச்சரவை முடிவு

அதானே, இன்று சட்டமன்ற கூட்டமாமே உருப்படியாக ஒன்றும் அறிவிக்கமாட்டார்களே, இந்த மாபெரும் அறிவாளிகள் என்ன விவாதிக்க போகின்றார்கள்? என்ற எண்ணம் இருந்தது.

டாஸ்மாக் சரக்கின் விலையினை உயர்த்த கூட்டம் போட்டு விவாதித்தார்களாம், உருப்படுமா தமிழ்நாடு?

ஏன் இப்பொழுது டாஸ்மாக் விலையினை கூட்டவேண்டும்?

அப்பொழுதுதான் எம்.எல்.ஏக்களுக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க முடியும்?

வோட்டு போட்டு ஒருவரை எம்.எல்.ஏ ஆக்கி, அவருக்கு 1 லட்சம் சம்பளம் கொடுக்க டாஸ்மாக் சரக்கினையும் வாங்கி குடிக்கும் தமிழக குடிமகனை போல உலகில் ஒரு நல்லவன் உண்டா?


Image may contain: 4 people, people smiling, indoor“கவலை படாத பங்காளி, சரக்கு விலை ஏற்றியது எல்லாம் பிரச்சினையே இல்லை, விலை ஏறிவிட்டது என்பதற்காக எவனும் குடிக்காமல் இருக்கபோவதில்லை

சிலர் குடிவிலை ஏறிவிட்டது என கத்துவான், தேர்தல் நேரத்தில் இலவச பாட்டில் கொடுத்தால் சத்தம் இல்லாமல் வோட்டு போட்டுவிட்டு செல்வான்,

எத்தனை எலெக்சன் பாத்திருக்கோம், Be Happy.. Smile Please !!!