அவர்கள் எண்ணபடியே வாழட்டும்

பள்ளிவாசல் என்றால் குரான் இருக்கும் இன்னும் ஏகபட்ட இஸ்லாமிய நூல்களும் அவற்றுக்கான விளக்கங்களும் இருக்கும்

வந்தோருக்கு உணவும் இன்னும் பிற நல்ல விஷயங்களும்தான் பள்ளிவாசலில் இருக்கும், இதுவரை உலகம் கண்டது

ஆச்சரியமாக இலங்கை பள்ளிவாசல்களில் என்னவெல்லாமோ மீட்கபடுகின்றன, அதில் வாள் முதல் ஏகபட்ட ஆயுதங்களும் அடக்கம்

பாலில் கலந்துவிட்ட விஷம் போல அந்த கொடூர கும்பல் புனிதமான பள்ளிவாசல்களை ஆயுத குடோனாக மாற்றி வைத்து தொலைத்திருக்கின்றன‌

இந்நிலையில் அங்கு ஒரு விஷயம் மனதை உருக்குகின்றது

தேவாலயங்களில் பலியானோருக்காக நல்ல இஸ்லாமியர் ஒருபக்கம் பிரார்த்திக்கின்றனர்

இந்து ஆலயங்களிலும் சிறப்பு விளக்கு வழிபாடுகள் நடக்கின்றன, ஏராளமான இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை நடத்தி கிறிஸ்தவர்களுக்கான ஆறுதலை இலங்கை சைவ மக்கள் உருக்கமாக தெரிவிக்கின்றனர்

அம்மக்கள் மகா ஒற்றுமையாக வாழத்தான் நினைக்கின்றார்கள், அவர்கள் எண்ணபடியே வாழட்டும்