அவர் என்ன அதிமுக கவுன்சிலரா இல்லை புலிதலைவரா?
4 ஆயிரம் டன் அரிசியொடு வந்த ஆஸ்திரேலிய கப்பலை மறித்து எனக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தார் பிரபாகரன்
இப்படி ஒரு வீடியோவில் சைமன் சொல்லிகொண்டிருப்பதாக நமக்கும் அனுப்பினார்கள், இதில் என்ன ஆச்சரியம்? அன்னாரின் பழைய கதையினை கேட்டால் இப்படி ஆச்சரியபடமாட்டீர்கள்
உதாரணம் பல உண்டு அவற்றில் இதுவும் ஒன்று
“தன் மெய்காப்பாளன் கடாபியினை அழைத்து இவர்தான் கைதுப்பாக்கியான் சிங்கள விமானத்தை வீழ்த்தினான் என காட்டினார் அண்ணன், நான் அந்த துப்பாக்கியினை தடவி பார்த்தேன்”
ஒரு கைதுப்பாக்கியால் விமானத்தை சுட முடியுமா? சுட்டாலும் விழுமா? இப்படி எல்லாம் அள்ளிவிட்டவர் சைமன்
சரி, கைதுப்பாக்கியால் விமானத்தை சுட்டவர்கள் இறுதி யுத்தத்தில் ஏன் அப்படி விமான குண்டுவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் என கேட்டால், கைதுப்பாக்கி கிடைக்காமல் செய்தது கலைஞர் சதி என பதில்வரும்
இப்படிபட்ட பிராடு வீடியோக்களில் ஒன்றுபற்றி நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ, நாம் பார்த்துவிட்டு இப்படி எலலாமா ஒரு மனிதன் அள்ளிவிடுவான் என சிந்தித்த காலம் உண்டு
என்ன சொன்னார் அன்னார்?
“நான் பிரபாகரனை நள்ளிரவில் சந்தித்தபொழுது எம்ஜிஆர் செய்த உதவிகளை அண்ணன் சொல்லிகொண்டிருந்தார், அப்பொழுது சிங்களன் சுற்றிவிட்டான்
நானும் அண்ணனும் ஓடினோம், மேலிருந்து குண்டு மழை, சுற்றிலும் பீரங்கிகுண்டு, அப்பொழுது நானும் என் அண்ணனும் ஒரு மரத்தின்பின்பு ஒளிந்திருந்தோம்
அப்பொழுது என் கையினை பிடித்து சொன்னார் அண்ணன், தம்பி அப்படி எல்லாம் உதவிய எம்ஜிஆரை இழந்துவிட்டோமடா தம்பி.. எதற்குமே அழாத என் அண்ணன் அன்று எம்ஜிஆர் என்றவுடன் அழுதார்..”
எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா?
இவர் சென்றது சமாதான காலம், ஒரு வாதத்திற்கு அது சண்டை என வைத்தாலும் பிரபாகரன் பங்கரை விட்டு வெளிவந்ததே இல்லை, அதுவும் நள்ளிரவில் விளக்கினை ஏற்றிவைத்து பேசுவது எல்லாம் அவருக்கு பழக்கமே இல்லை
ஒருவேளை சிங்களன் ரகசிய ஆப்பரேஷன் நடத்தினாலும் பிரபாகரன் புலிகளுக்கு கட்டளை பிறப்பிப்பாரா? இல்லை மரத்திற்கு பின்னால் இருந்து கொண்டு எம்ஜிஆர் வாழ்க என்பாரா?
அவர் என்ன அதிமுக கவுன்சிலரா இல்லை புலிதலைவரா?
என்று ராஜிவ் உத்தரவுபடி பிரபாகரனின் ஆயுதத்தைபிடுங்கி ராமசந்திரன் சென்னையில் பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தாரோ அன்றே மனமார எம்ஜிஆரை எதிர்த்தான் பிராபகரன்
அதுவும் டெல்லி அசோகா ஹோட்டலில் ராமசந்திரன் ஆளை விட்டால் போதும் என ஓடிய பொழுதும், அமைதிபடை அனுப்பபட்டபொழுது எதிர்ப்பு காட்டாததும் ராமசந்திரன் மீது அவனுக்கு பெரும் ஆத்திரத்தை கொடுத்தது
அப்படிபட்ட பிரபாகரன் யுத்த பூமியில் மரத்திற்கு பின்னால் நின்று எம்ஜிஆர் வாழ்க என இவரிடம் சொன்னாராம்
இப்படி எல்லாம் அள்ளிவிட்டவருக்கு, அரிசி கப்பல் கட்டுகதை எம்மாத்திரம்?