அவர் எழுப்பியிருக்கும் குரல் நியாயமானது
பாராளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதங்களை சொன்னவர் அண்ணா, அவரின் கேள்விகள் அன்றெல்லாம் பலத்த அதிர்வுகளை கொடுத்தன
அவர் கேட்ட கேள்விகள் இப்படித்தான் இருந்தன
மாநிலத்தின் குறைவான வருமானங்களை தரகூடிய மிக சிறிய துறைகள்தான் மாநில நிதிக்கு ஆதாரம். துறைமுகம், சுரங்கம், விமான நிலையம், போக்குவரத்து உட்பட 14 மகா முக்கிய நிர்வாகம் மத்திய அரசிடமே உள்ளது
இதில் இருந்து மாநிலங்களுக்குரிய நிதியினை சரியாக தருவதுமில்லை, இது திருத்தபட வேண்டும்
அந்நாளில் மாபெரும் அதிர்வுகளை அந்த வாதம் ஏற்படுத்தியது
அண்ணா சொன்னதில் உண்மையும் இல்லாமல் இல்லை
1970களில் கலைஞர் அதைத்தான் சொன்னார், அதை பலர் மறந்தும் விடுவர்
“ஆம், தமிழகத்துக்கான நிதி அதன் உரிமையான அளவில் கொடுக்கபட்டால் மதுகடைகளை திறக்கும் அவசியம் ஏன் வருகின்றது?”
அது உண்மையும் கூட, மத்திய அரசு முரண்டு பிடிப்பது சில சிக்கல்களுக்கு காரணம்
பின்னாளில் அதுபற்றி யாரும் மத்திய அமைச்சரவையில் பேசவில்லை
முதன் முதலாக அண்ணாவுக்கு பின் கனிமொழி அதுபற்றி பேசியிருக்கின்றார்
நல்ல வாதங்களை வைக்கும்பொழுது வாழ்த்தியாக வேண்டும்
நியாயமிக்க தமிழக குரலாக அண்ணாவுக்கு பின் கனிமொழி எழுப்பியிருப்பது தேசத்தை உற்றுபார்க்க வைத்திருக்கின்றது
அவர் நமக்கு தோழர், தோழி எல்லாம் அல்ல
ஆனால் நல்ல தமிழச்சியாக அவர் எழுப்பியிருக்கும் குரல் நியாயமானது, வாழ்த்துக்கள்
தூத்துகுடி காற்றுபட்டால் அப்படித்தான் , போராட்ட குணம் தானாக வந்துவிடும்..