அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர்
அவர் பெரும் அறிவாளி, ஞானி உலகம் அறிந்த மேதை இரண்டாம் ஜிடி நாயுடு என்றெல்லாம் ஹீலர் பாஸ்கரை எதோ லூயி பாஸ்டர் அளவிற்கு நம்மிடம் பில்டப் விட்டார்கள்
அவரின் உலக அறிவினை பார் என ஒரு வீடியோவினைவும் அனுப்பினார்கள், அதிலிருந்து அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர் என்பது தெரிந்தது
அன்னாரை சைமனுக்கு அடுத்தபடி ஏன் தும்பிகள் கொண்டாடுகின்றன என்றால் அவர்களுக்கு இம்மாதிரி அறிவுகெட்ட, சுத்த விவரமில்லாதவர்களைதான் பிடிக்கும், இனம் இனத்தோடு என்பது இதுதான்
அன்னார் வீடியோவில் இலங்கையில் இலுமினாட்டி பற்றி பேசினார், என்ன பேசினார்?
இலங்கையில் பொற்கால ஆட்சி நடந்ததாம், எல்லோரும் அமைதியாக இருந்தார்களாம், பிரேமதாச எல்லாம் மகா உத்தம ஆட்சி நடத்தினானாம்
அங்கே இலுமினாட்டி புகுந்து பிரபாகரனை உருவாக்கி இலங்கையினை கைபற்றிவிட்டு பிரபாரகனை கொன்றுவிட்டார்களாம்
இந்த நூற்றாண்டில் தலையில் அடித்துகொண்டு அதே நேரம் ஹிஹிஹி பாஸ்கரின் சுத்தியால் அடித்து கொல்ல வேண்டிய விஷயமிது
இலங்கை பிரச்சினை என்பது சுதந்திரத்திற்கு முன்பே அனாரிகா தர்மபாலா தொடங்கி வைத்த சிங்கள இனவெறியில் இருக்கின்றது
அதன் பின் அது பண்டாரநாயக காலத்தில் மலையக மக்களை இந்தியாவிற்கு விரட்டுதலில் தொடர்ந்தது
பின்பு ஈழமக்களுக்கு எதிரான கலவரம் தொடங்கின
1960களிலே இறுக்கம் கூடிற்று, ஆங்காங்கே கலவரம் நடந்தன
1970களில் மாணவர்களை தரபடுத்துதல் என இட ஒதுக்கீட்டு முறையினை ஈழமக்களுக்கு எதிராக சிறிமாவோ அரசு கொண்டுவந்தபொழுது மாணவர்கள் பொங்கினர்
பின் அது வன்முறையாகி ரவுடிகளின் கையில் போராட்டம் சென்றது
பண்பட்டவர்கள், படித்தவர்கள், ரவுடிகள் என எல்லோரும் கலந்து நின்ற போராட்ட காலத்தில்தான் பிரபாகரனும் உள்ளே வந்தார்
மாபெரும் அயோக்கியன் ஜெயவர்த்தனேவின் கொடுமையில் 1983ல் கொழும்பு எரிந்தது, அப்படி தமிழரை எரிக்காவிட்டால் ஜெயவர்த்தனே இருக்கமாட்டார் என மிரட்டியவன் பிரேமதாச
ஈழமக்களுக்கு ஆதரவாக வந்த இந்திய படைகளை வெளியேற்றாவிட்டால் சிங்கள படைகள் தாக்கும் என மிரட்டியவன் பிரேமதாச
பின் புலிகளை வஞ்சகமாக பயன்படுத்த புலிகளும் அதே வஞ்சகத்தில் கொன்றனர்
சிங்களரில் ஒரு நல்ல அதிபர் கூட வரவில்லை, வந்தாலும் அந்த புத்த இனவெறி சிங்கள சாமியாரை மீறி தமிழருக்கு உரிமை கொடுப்பது சாத்தியமுமல்ல
இந்தியா ஈழமாநிலம் அமைத்து கொடுக்க முன்வந்ததே தவிர தனி நாடு அல்ல, ஆனால் பிரபாகரன் தனிநாடு கிடைப்பதே முடிவு என போராடினார்,
அதிதீவிரவாதத்தில் செய்ய கூடாத தவறை எல்லாம் செய்ய மொத்தமாய் அழிந்தார்
இதுதான் இலங்கை வரலாறு
இதில் எங்கிருந்து இலுமினாட்டி வந்தான், எங்கிருந்து இலங்கை அமைதியாக் இருந்தது
அனாரிகா தர்மபாலா காலத்திலே எரிய தொடங்கிய இலங்கை அவ்வப்போது எரிந்து, முள்ளிவாய்க்காலில் கொடூரமாக எரிந்தது
இன்னமும் எரியலாம் வாய்பிருக்கின்றது
ஆனால் ஒரே ஒரு நல்ல சிங்கள அதிபர் இருந்திருந்தால் நிலமை மாறி இருக்கும்
நரி பண்டாரநாயகே, குள்ளநரி ஜெயவர்த்தனே, அயோக்கியன் பிரேமதாச, முரடன் ராஜபக்சே என வெறியர்களால் ஆளபட்டது அத்தேசம்
ஜெயவர்த்தனே நியாயமாக இருந்திருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்கமாட்டான், வாய்ப்பே இருந்திருக்காது
ஆக அயோக்கிய தனம் செய்ததெல்லாம் சிங்களம் , அதற்கு அறிவே இல்லாமல் முரட்டுதனத்துடன் போராடியவன் பிரபாகரன்
இதில் எங்கிருந்து இலுமினாட்டி வந்தான்
சுத்தமாக ஒரு மண்ணும் தெரியாத ஆளாக இருந்திருக்கின்றான் இந்த ஹிஹிஹிஹ் பாஸ்கர்
அவனைவிட அவன் ஆதரவாளரர்களான தும்பிகளை நினைத்தால் பாவமாயிருக்கின்றது
அட அறிவுகெட்ட தும்பிகளா, அவன் சிங்களம் அமைதியாக இருந்த இனம் என்கின்றான், நல்லாட்சி நடத்தினார் என்கின்றான்
பின் எங்கிருந்து பிரபாகரன் உருவானான் என கேட்க ஒரு தும்பியுமா இல்லை, இவ்வளவுதான் உங்கள் அறிவு
இந்த பேச்சுக்கு ஹிஹி பாஸ்கரின் வாயிலே குத்தவேண்டும், ஆனால் தும்பிகளும் அவர்களின் தலைவன் சைமனும் பாஸ்கருக்கு ஆதரவாக கத்திகொண்டிருக்கின்றன
ஒரு மில்லிகிராம் கூட மூளையோ, சிந்தனையோ இல்லாதது இந்த தும்பி கூட்டமும் அந்த ஹிஹிஹ் பாஸ்கரும்