அஸ்ராம் பாபு சாமியார் அட்டகாசம் ஓயவில்லை
இந்த அஸ்ராம் பாபு சாமியார் அட்டகாசம் ஓயவில்லை, அவருக்கும் பிரேமானந்தாவிற்கும் ஒரே ராசி
பிரேமானந்தா இலங்கையிலிருந்து வந்தார்,இந்த அஸ்ரம் பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தார். சாமியாராகிவிட்டால் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் அல்லவா அப்படியே இருவரும் சம்பாதித்தனர்
சம்பாதித்துவிட்டு என்ன செய்ய வேண்டும்? பெண் தொடர்பில் மாட்ட வேண்டும் , அதை இருவரும் சமத்தாக செய்தார்கள்
இப்போது அஸ்ரம் சாமி சிறையிலிருந்து தன் பக்தர்களுக்கு ஆறுதல் மொழி சொல்லிகொண்டிருக்கின்றார் அது வாட்சப்பில் எல்லாம் வருகின்றதாம்
சிறையிலிருந்து சாமியார் போதிப்பதை கண்டால் பிதாமகன் படத்தில் சூர்யாவோடு சிறையில் இருக்கும் அந்த “மை சன்” புகழ் சாமியார் நினைவே வருகின்றது