அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ். இன்னும் சில ….

கடை வாடகையை சென்னை மாநகராட்சி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரும் லதா ரஜினிகாந்தின் டிராவல் எக்சேஞ்ச் ஏஜென்சி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்த அம்மணிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை வாடகை போல, எங்கு சென்றாலும் வாடகை கொடுக்கமாட்டேன் என அடம் பிடிக்கின்றது

இப்பொழுது கோர்ட்டுக்கே சென்று முகத்தில் கருப்பு மை வாங்கி இருக்கின்றது.

ரஜினி மட்டும் சம்பளத்தை கூட்டி கொண்டே செல்லலாம், ஆனால் வாடகை மட்டும் கூடவே கூடாது என்பது அம்மணியின் கொள்கைகயில் ஒன்று

ரஜினி ஏன் மெலிந்தே இருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் விளங்குகின்றது, சாப்பாடு கிடைப்பது சந்தேகம்தான்

இப்படி ஒரு மனைவி வாய்த்தபின் யார்தான் சாமியார் ஆகமாட்டார்கள்??

இமயமலைக்கு தலை தெறிக்க ஓடமாட்டார்கள்?

அநேகமாக வாடகை பாக்கி பற்றி பேசியே ரஜினியினை இந்தம்மா இமயமலைக்கு ஓடவிட்டிருக்கலாம்


அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ்.: துரைமுருகன்

அது இருக்கட்டும் துரைமுருகன், இந்த வைகோ கட்சியிலிருந்து, அதிமுகவில் இருந்து சிலர் திமுகவிற்கு வந்தார்களே? அவர்களை எல்லாம் எங்கே?

இருக்கின்றார்களா? இல்லையா?


சத்துணவில் முட்டை நிறுத்தம்

அவர்களும் என்ன செய்வார்கள்? அவர்கள் ஆட்சி வாங்கும் எல்லா மதிப்பெண்ணும் முட்டையாகவே இருக்கின்றது, எல்லா திட்டத்தின் முடிவும் முட்டை

பின் முட்டை என்றால் வெறுப்பு வராதா? நிறுத்திவிட்டார்கள்

இனி எங்கள் ஆட்சி முட்டை இல்லா ஆட்சி என அவர்களாக சொல்லிகொள்வார்கள்.