அ.தி.மு.க., ஆட்சியில் கொலைகள் குறைவு : முதல்வர் பழனிசாமி தகவல்
அ.தி.மு.க., ஆட்சியில் கொலைகள் குறைவு : முதல்வர் பழனிசாமி தகவல்
அப்பல்லோ முதல் கொடநாடு வரை எவ்வளவு மர்மங்கள், சமீபத்தில் கூட கொடநாட்டில் ஒரு வேலைக்காரர் செத்திருந்தார்
எத்தனை கவுரவ கொலைகள்?
விஷ்ணுபிரியா போல எத்தனை காவலரின் மர்ம சாவுகள்??
இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் கொலைகள் குறைவு என பெருமை பட்டுகொள்கின்றார் முதல்வர்
ஒருவேளை அவை எல்லாம் கொலைகள் அல்ல, கட்சி கலாச்சாரம் என நினைத்துவிட்டாரோ??
கொலைகள் குறைவு என்பதை கொடநாட்டு மர்மங்களை மறைத்து சொல்லும் முதல்வருக்கு, இந்த ஆட்சியின் அவலத்தால் தற்கொலை செய்பவர்கள் பற்றி வாய்திறக்க மனமில்லை
விவசாயி முதல் எத்தனை வகை தொழிலாளர் தற்கொலைகள், அவற்றிற்கு எல்லாம் காரணம் யார் மிஸ்டர் பழனிச்சாமி?
இதற்கு திமுக தரப்பு ஒரு பதிலும் சொல்லவில்லை, இப்பொழுதுள்ள திமுக தரப்பு அப்படித்தான்
இதுவே கலைஞர் என்றால், “கொலை செய்யும் முழு பொறுப்பினையும் ஆளும் கட்சியும், அரசும் எடுத்துள்ள நிலையில் அவர்களை மீறி என்ன கொலை நடக்க போகின்றது?
அவர்கள் வைத்தது தான் சட்டம், அவர்கள் செய்வதுதான் கொலை என்பது பல இடங்களில் தெரிகின்றது,
அது கொடநாட்டில் மலை மீது விளக்காக தெரிகின்றது உடன்பிறப்பே.
கொலையால் சாவது மட்டும்தான் சாவா? பஞ்சம், பசி பட்டினியால் எத்தனை மக்கள் வாழ வழியற்று தமிழகத்தில் செத்துகொண்டிருக்கின்றார்கள்
காவல்துறை அதிகாரிகள் கூட பாதுகாப்பின்றி தற்கொலை செய்கின்றார்கள், சாதிய கொலைகளும் இன்னபிற கொடூரமும் தமிழகத்தை வாழ தகுதியில்லா இடமாக மாற்றிவிட்டன
இதில் ஏதோ சாதித்ததை போல, பொய்மூட்டை அவிழ்க்கும் இந்த எடாபாடி பழனிசாமியினை மக்கள் நம்மை போல கவனித்துகொண்டிருக்கின்றார்கள் உடன்பிறப்பே..”.” என சாடியிருப்பார்