ஆசிரியர் போராட்டத்தில் அரசு அதிரடி

ஆசிரியர் போராட்டத்தில் அரசு அதிரடி
அதாவது பொதுதேர்வுகள் நெருங்கும் நேரம் இந்த அரசு ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வது கொஞ்சமும் பொறுப்பற்ற செயல்
இப்பொழுது அவர்களுக்கு என்ன குறை அல்லது இல்லை? ஆனானபட்ட டிரம்பே அமெரிக்க அரசு ஊழியருக்கு சம்பளத்தை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இங்கு அப்படியா நடக்கின்றது?
தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்களை அம்போ என விட்டுவிட்டு ஸ்ட்ரைக் செய்யும் இவர்களை எல்லாம் உடனே வேலை நீக்கம் செய்ய வேண்டும்
அவர்களுக்கு பொறுப்பில்லை ஆனால் அரசு யோசித்திருக்கின்றது
இந்த மாணவர்கள் என்ன ஆவார்கள்? என யோசித்த அரசுக்கு அட்டகாசமான ஐடியா கிடைத்திருக்கின்றது
ஆசிரியர் பயிற்சிபள்ளியில் முடிக்கும் தருவாயில் இருப்போரை இப்பொழுது ஆரம்ப பள்ளி மற்றும் இடைநிலை பள்ளிக்கு பணிக்கு கொண்டுவந்துவிட்டது
இதனால் பள்ளிகள் தடைஇன்றி இயங்குகின்றன
பள்ளி என்பது என்ன? மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யுமிடம் இதோ செய்துவிட்டார்கள்
இனி உயர்நிலைக்கு சில டியூட்டோரியல் காலேஜ் ஆசிரியர்களை அழைத்தால் தீர்ந்தது சிக்கல்
நாம் முன்பே சொன்னோம், இது இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி அரசு, மாணவர்கள் கல்வி பாதிக்கபடுவதை அனுமதிக்காது என
இதோ அட்டகாசமாக சமாளித்துவிட்டார்கள், வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் அப்படியே வீட்டுக்கு செல்லலாம், கோர்ட்டுக்கு சென்றால் அரசிடம் பதில் இருக்கின்றது
“பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான்
வேளைவந்தால் விஸ்வரூபம் எடுப்பான்”
சிங்கம் ஒன்று புறப்பட்டதே….
இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி வாழ்க..