ஆச்சார கோவை : 01

ஆச்சார கோவை : 01

தமிழ் இலக்கியத்தின் இன்னொரு மிகசிறந்த நூல் ஆச்சார கோவை

பண்டைய தமிழக இந்துக்கள் எவ்வளவு ஆச்சாரமாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது அந்த பாடலில்தான் உள்ளது

ஆச்சாரம் என்பது மானிட வாழ்வையும் உடலையும் சரியாக பராமரிக்கும் முறை, நல்ல ஒழுங்குமுறை

அது எல்லா மக்களுக்கும் பொதுவான விதியாய் இந்நாட்டின் இந்துக்களுக்கு சொல்லபட்டிருந்தது, ஆனால் கோவில் திருபணியிலும் வழிபாட்டிலும் முன்னால் நின்ற பிராமண இனம் அதனை முழுக்க பின்பற்றியது

எப்பொழுதுமே வழிகாட்டிகள் சரியாக இருக்க வேண்டும், அவர்கள் வழிகாட்டினால்தான் மக்கள் பின்பற்றுவார்கள் என்பதால் அந்த நெறிகள் பிராமணருக்கு வலியுறுத்தபட்டன‌

ஆனால் பின்னாளில் எல்லாம் மாறி ஆச்சாரம் என்றால் பிராமணருக்கு மட்டும் எனும் அளவு இங்கு எல்லாம் மாறிற்று இன்று பிராமணர் தனி ஆச்சாரம் கடைபிடிப்பதாக சொல்லி அதனை மூடநம்பிக்கை என இழிக்கும் வழக்கமும் உருவாயிற்று

உண்மையில் எல்லா மக்களும் கடைபிடித்த ஆச்சாரத்தை இன்று பிராமணர் மட்டும் தொன்றுதொட்டு காத்துவருகின்றார்கள் என்பதுதான் நிஜம்

அந்த ஆச்சார கோவையினையும் இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம், இதோ முதல்பாடல்

“நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல் இனத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து”

எந்நிலையிலும் தனக்கு உதவியவருக்கு நன்றியோடு இருத்தல், எச்சூழலிலும் பொறுமை காத்தல், இனிய சொற்களோடு கனிவாக பேசுதல், எந்த உயிர்க்கும் கொடுமை செய்யாமை, நல்ல கல்வி, மிக தூய்மையான ஒழுக்கம், நல்ல சிந்தனை, நல்லோற் உறவு ஆகிய எட்டும் ஆச்சாரம் எனும் நல்ல வழக்கத்திற்கு வித்தானவை என்பது பொருள்

இந்த எட்டு விஷயங்கள் அடிப்படையில்தான் மானிட வாழ்வு அமைதல் வேண்டும் என தொடங்கும் பாடல் இந்த எட்டு விஷயங்களையும் இன்னும் ஆழமாக சொல்ல தொடங்குகின்றது அவற்றை ஒவ்வொன்றாக காணலாம்