ஆச்சார கோவை 05

“எச்சிலார் தீண்டார் பசு, பார்ப்பார் தீ தேவர்
உச்சந் தலையோடு இவை என்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்”

எச்சில் கையினாலோ, துடைப்பம் போன்றவற்றாலோ யாரும் தொடகூடாதவை பசு, வேதம் ஓதும் அந்தணர்கள், நெருப்பு, தெய்வ சிலைகள், மானிட உச்சந்தலை என ஐந்து விஷயங்களை ஆச்சாரம் என ஆச்சார கோவை சொல்கின்றது

இவை ஐந்தும் புனிதமான விஷயங்கள் என்பது பாடல் சொல்லும் விஷயம், அக்கால மரபில் இவையெல்லாம் மிக புனிதமானவைகளாகவும், வலுவான சத்தியம் செய்யும் அளவு உயர்ந்த இடத்திலும் கொண்டாடபட்டன‌

இவைகளில் சில‌ ஆச்சாரம் என சொல்லபட்டாலும் நோய் பரப்பும் விஷயங்களை தடுக்கும் விதமாகவும் இவை இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை, ஆழ கவனித்தால் புரியும்

இன்றும் இந்த மரபினை வழிவழி ஆச்சாரங்களை கடைபிடிப்போர் கடைபிடிக்கத்தான் செய்கின்றார்கள்