ஆச்சார கோவை 05
“எச்சிலார் தீண்டார் பசு, பார்ப்பார் தீ தேவர்
உச்சந் தலையோடு இவை என்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்”
எச்சில் கையினாலோ, துடைப்பம் போன்றவற்றாலோ யாரும் தொடகூடாதவை பசு, வேதம் ஓதும் அந்தணர்கள், நெருப்பு, தெய்வ சிலைகள், மானிட உச்சந்தலை என ஐந்து விஷயங்களை ஆச்சாரம் என ஆச்சார கோவை சொல்கின்றது
இவை ஐந்தும் புனிதமான விஷயங்கள் என்பது பாடல் சொல்லும் விஷயம், அக்கால மரபில் இவையெல்லாம் மிக புனிதமானவைகளாகவும், வலுவான சத்தியம் செய்யும் அளவு உயர்ந்த இடத்திலும் கொண்டாடபட்டன
இவைகளில் சில ஆச்சாரம் என சொல்லபட்டாலும் நோய் பரப்பும் விஷயங்களை தடுக்கும் விதமாகவும் இவை இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை, ஆழ கவனித்தால் புரியும்
இன்றும் இந்த மரபினை வழிவழி ஆச்சாரங்களை கடைபிடிப்போர் கடைபிடிக்கத்தான் செய்கின்றார்கள்
இன்று உலகெங்கிலும், “அடிக்கடி கைகளைத் தூய்மை செய்யுங்கள், கை குலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள், கண்ட கண்ட இடத்தில் எச்சில் துப்பாதீர்கள், தரையில் அமர்ந்தே உணவு உண்ணுங்கள், உடலையும், உடைகளையும் தூய்மையாக வைத்திருங்கள், இருமும்போதும், தும்மும்போதும் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள், மலஜலம் கழித்த பின் கை, கால்களைத் தூய்மைப்படுத்துங்கள், எச்சில் படுத்திய பொருளைத் தீண்டாதீர்கள்’ என்பன சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை பல்லாண்டுகளுக்கு முன்பே கூறி எச்சரித்தவர் புலவர் பெருவாயின் முள்ளியார்.
மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான, இன்றியமையாத ஆசாரங்களை இந்த பாடல் கூறுகின்றது…அருமையான விளக்கம்.