ஆச்சார கோவை : 42

ஆச்சாரகோவை எனும் இந்த சங்ககால பாடல் தொகுப்பு சமூக வெளிப்புற ஆச்சாரங்களை மட்டும் சொல்லவில்லை, அது இன்பவாழ்வின் தாத்பரியத்தையும் அகவாழ்வின் நுணுக்கமான விஷயங்களையும் குறிப்பாக மங்கையரின் மனமும் உடல்நிலை குறித்து அறிந்த ஞானத்தில் போதனைகளை சொல்கின்றது

கணவன் மனைவி இணைந்ததுதான் இல்லறம், அந்த இல்லறத்தில் மனைவியின் மனமும் உடல்நிலையும் அவன் அறிதல் அவசியம், அதை அறியா இடத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன‌

கணவன் மனைவி சிக்கலுக்கு முதல் காரணம் மனைவியின் சில மனநிலையும் உடல்நிலையும் கணவன் புரிந்துகொள்ளாததே என்பதை உணர்ந்த இந்துமதம், அங்கும் சில ஆச்சாரங்களை போதித்தது

அதனில் ஒன்றுதான் இந்த பாடல்

“தீண்டா நாள் முந் நாளும் நோக்கார் நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க’ என்பதே –
பேர் அறிவாளர் துணிவு”

அதாவது மனைவி மாதாந்திர விலக்காக இருக்கும் மூன்று நாளும் அவளை அணுக கூடாது , மூன்று நாள் கழிந்து அவள் நீராடியபின் 12 நாட்கள் அவளை விட்டு விலக கூடாது என்பது பொருள்

ஆம் மாதாந்திர காலங்களில் அவளுக்கு ஓய்வு வேண்டும் அடுத்த 12 நாட்கள் அவள் கருத்தருக்கும் வாய்ப்பு உண்டு இன்னும் சில தாம்பத்ய சம்பத்துக்களும் உண்டு, அதை கணவன் கடமை

இதெல்லாம் சரியாக இருந்த காலங்களில் மனநல மருத்துவர் இல்லை, ஆலோசகர்களும் மருந்து மாத்திரைகளும் பெண்களுக்கு அவசியமில்லை, முக்கியமாக விவாகரத்தும் இன்னும் இம்சைகளும் இல்லை

மானிட உடலை மனம் இயக்குகின்றது, அந்த மனதை கூர்ந்து நோக்கிய இந்துமதம் குடும்பம் நிலைத்திருக்க பல வழிகளை போதித்தது, இந்த பாடலும் அப்படித்தான்

இந்த அளவு பெண்களின் மனமும் தேவையும் அவசியமும் அறிந்து குடும்பங்கள் நிலைக்க வழிசொன்ன இன்னொரு மதம் உலகில் இல்லை, இந்துமதம் ஒன்றே அதற்கு வழி செய்திருந்தது