ஆடையின்றி யோகா செய்தார் ஷில்பா ஷெட்டி

Image may contain: 1 person

இரு நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர், ஒருவர் ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி என்பவர்.

அம்மணி என்ன வகை நடிகை என்பது தெரியவில்லை, ஆனால் நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்டவர் என்பது மட்டும் தெரிகின்றது, என்னை பாடாய் படுத்திய தெலுங்கு திரையுலகத்தை சும்மா விடமாட்டேன் என கையில் போனுடன் கிளம்பிவிட்டார்

அதாவது சுச்சி லீக்ஸ் போல ஸ்ரீ லீக்ஸ் ஒன்று தொடங்கிவிட்டார், சில டிரையல்களுக்கே ஆடி போய் இருக்கின்றது தெலுங்கு திரையுலகம்

இன்னும் என்னவெல்லாம் அம்மணி லீக்செய்ய போகின்றாரோ என ஸ்ரீ லீக்ஸ் ஜுரத்தில் இருக்கின்றது ஆந்திரா

இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் ஷில்பா ஷெட்டி

அம்மணி ராம்தேவின் பக்தை என்பதும், யோகா எல்லாம் செய்பவ என்பதும் உலகறிந்தது. சில மேடைகளில் அமித்ஷாவினை பார்த்த ராசியோ என்னமோ உளறிவிட்டார்

யோகா செய்வதற்கு எதற்கு ஆடை? நான் ஆடையின்றிதான் யோகா செய்வேன் என அவர் சொல்ல விஷயம் பற்றிகொண்டது

ஆடையின்றி யோகா செய்தார் ஷில்பா ஷெட்டி என விஷயம் திரிந்து பரவுகின்றது,

உலகம் சட்டென பதறிவிட்டு தொலைந்து போன வைர மோதிரத்தை தேடும் அவசரத்தில் அந்த காணொளி கிடைக்குமா என தேடிகொண்டே இருக்கின்றது..