ஆண்டவன் எப்பவும் என்ன கண்காணிச்சிட்டே இருக்கான்
உலகம் பூரோ கொரொனா, தமிழ்நாட்டுல 144
ஆக இனி யாரும் பேச கூடாது, கூட்டம் போட கூடாது, நல்லது. நான் இந்நேரம் மக்களை கூட்டம் போட அனுமதிக்கமாட்டேன், ஏன் மணியன், மாரிதாஸ், பாண்டே கூட சந்திக்கமாட்டேன்
இன்னும் ஒருவருஷம் இப்படியே இருப்ப்பேன், ஆமா கட்சிவிட ஆட்சிவிட மக்கள் நலன் முக்கியம்
இனி யாரும் நம்மகிட்ட கட்சி பேசமாட்டாங்க, அரசியல் பேசமாட்டாங்க, கொஞ்ச நாளைக்கு நிம்மதியா விட்ருவாங்க, அப்படியே தேர்தல் வந்துரும், நேரமில்லன்னு சொல்லிட்டு தப்பிச்சிரலாம்.
ஆண்டவன் எப்பவும் என்ன கண்காணிச்சிட்டே இருக்கான்…
ஹரே பாபா.. பூர்வ ஜென்ம கர்மா.. சம்யுக்தா வர்மா.. ஹஹஹஹஹா
