ஆண்டாள் சர்ச்சையா? : கலைஞர் கருத்து (கற்பனை)

கடைசியாக அவர்கள் எங்கு குறிவைத்தார்களோ அங்கு வந்தாயிற்று, திமுக ஏன் வைரமுத்து விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என வந்து நிற்கின்றார்கள்

ஆக அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லாம் வைரமுத்துவிற்கு எதிராக அல்ல, திமுகவினை சிக்கலில் விடவேண்டும் என்பதே என்பது முடிவாகின்றது

கலைஞர் இருந்திருந்தால்…

“ஆண்டாள் சர்ச்சையா? ஏற்கனவே இங்கு ஒரு அம்மையார் ஆண்டாள், அந்த ஆண்டாள் ஒரு நாள் மர்மமாக மாண்டாள்.

அவளுக்கு சூடிகொடுத்த சுடர்கொடியும் சிறைபட்டாள்,

ஏன் சிறைபட்டாள் என்றால் ஆண்டாளுக்கு சூட்டிய மாலைக்கு பதிலாக யாருக்கோ தாமரை மாலை சூட்ட சொன்னார்கள், முடியாதென்றாள் சிறைபுகுந்தாள்.

அந்த ஆண்டாள் மாண்டாலும் அவள் விட்டுச் என்ற ஆட்சி செய்யும் அலங்கோலமும் தீரவில்லை. அந்த‌ ஆண்டாள் ஆட்சியின் தொடர்ச்சிக்கு எப்பொழுது முற்றுபுள்ளி வைப்பது என கழகம் தமிழக மக்களோடு சேர்ந்து சிந்தித்துகொண்டிருப்பதால் இந்த ஆண்டாள் பிரச்சினை இப்போது தேவையில்லை

அந்த ஆண்டாளின் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்தால் இந்த ஆண்டாள் சிக்கல் தானாய் தீரும்.”

இதன்பின் எவனாவது ஒரு கேள்வி கேட்பான்?

இருந்தாலும் தற்போதைய திமுக இப்படி சொல்லலாம்

“வடமொழியில் தேவதாசி என்றால் தமிழில் “ஆண்டவன் அடிமை” என்பது கூட தெரியாதவர்களுக்கு திமுக பதில் சொல்லாது, ஒழுங்காக தமிழ்படித்தால் மட்டுமே தீர கூடிய சிக்கல், இது.

தேவைபட்டால் அந்த ஆண்டவனின் அடிமையான ஆண்டாளின் அடிமைகளுக்கு தமிழ் வகுப்பு எடுக்க திமுக தயார்”