ஆண்டு 2017 எப்படி இருந்தது?

இந்த 2017 உலகளவில் எப்படி இருந்தது என்றால், பல போர்களை தவிர்த்த ஆண்டாகவே இருந்தது. அவ்வகையில் உலகிற்கு நல்ல ஆண்டு

அமெரிக்க வடகொரிய யுத்தம், இந்திய சீன யுத்தம் என உலகையே அச்சுறுத்திய விஷயங்கள் வெறும் பரபரப்போடு நின்றதுவிட்ட நல்ல விஷயம்

அரேபியாவினை அச்சுறுத்திய ஹிட்லருக்கு பின் அகோர கொலைகாரர்களான ஐஎஸ் இயக்கம் ஒடுக்கபட்டதும் இந்த வருடம்தான்

இந்த வருடத்தின் மிக கொடூர துயரங்களை அனுபவங்களை பெற்றவர்கள் சிரியர், ஏமானியர் மற்றும் ரொகைன்யா மக்கள்

யூதர்களுக்கு அவர்களின் 2000 ஆண்டு நோக்கம் கிட்டதட்ட 70% நிறைவேறியாயிற்று அவர்களுக்கு என்ன? எல்லா ஆண்டும் நல்ல ஆண்டே

தமிழர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருந்ததென்றால் பன்னீர், பழனிச்சாமி இருபெரும் அரசியல்வாதிகள் இந்த ஆண்டு கிடைத்தார்கள், அடுத்த ஆண்டு என்ன ஆக போகின்றார்கள் என்பதை காலம் காட்டும்

சசிகலா குடும்பத்திற்கு இந்த ஆண்டு மகா சோதனையான காலம், ஆனால் அக்குடும்பம் அசைந்ததாக தெரியவில்லை, கடும் வெள்ளத்திற்கும் அசையாத குன்றுபோல் நிற்கின்றது

மாலிக்காபூர் காலத்திற்கு பின் டெல்லியிலிருந்து பெரும் படைகள் வந்தது சசி குடும்பத்து ரெய்டுக்காகத்தான் இருக்கும், ஆனாலும் துரும்பும் சிக்கவில்லை

திமுகவிற்கு ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு ஒன்றே ஆறுதல் மற்றபடி இவ்வருடம் செயல்தலைவர் ஆன ஸ்டாலினால் அக்கட்சி பெறும் சீற்றம் எல்லாம் சீறவில்லை. ஆற்றங்கரையில் கட்டிபோடபட்டிருக்கும் படகு மிதப்பது போல் அக்கட்சி ஆடிகொண்டிருக்கின்றது

இந்திய அளவில் பாஜகவிற்கு சோதனைகள் அதிகம் என்றாலும் தங்கள் மக்கள் அபிமானத்தை இழக்கவில்லை மாறாக குஜராத் போன்ற தேர்தல்களில் அபார வெற்றிபெற்றார்கள்

தமிழ்க பாஜகவினர் வழக்கம்போல லட்டு கொடுத்தே மகிழ்ந்தனர், அவர்கள் செய்ய முடிந்தது அவ்வளவுதான்

காங்கிரஸுக்கு இந்த ஆண்டுதான் ராகுல் தலமை ஏற்றார், இனி காங்கிரஸின் நிலை எப்படி இருக்கின்றது என இனிதான் தெரியும்

மொத்தத்தில் பார்க்கபோனால் உலகிலே மகிழ்ச்சியாக இருந்த அரசியல்வாதியோ தலைவரோ யாருமில்லை ஒரே ஒரு தலைவரை தவிர‌

ஆம், தமிழிசை மட்டுமே ஆண்டு முழுக்க உற்சாகமாக இருந்த, 2018லும் உற்சாகமாக‌ இருக்க போகும் ஒரே அரசியல்வாதி