“ஆதாரமின்றி சொல்வதா” என குதித்தவர்கள் இனியாவது நம்புங்கள்…

ஸ்ரீதேவிக்கு மதுபழக்கம் இருந்தது என சொன்னால் “ஆதாரமின்றி சொல்வதா” என குதித்தார்கள்

அதற்கான ஆதாரங்கள் முன்பே வந்தன, அதனை கவனிக்காதவர்கள் எல்லாம் நாம் சொன்னவுடன் வந்து “நீ பார்த்தாயா? மயிலின் மாண்பை கெடுப்பதா?” என்றெல்லாம் பொங்கினார்கள்

இதோ துபாய் மருத்துவ அறிக்கை அவர் உடலில் மது அருந்திய அடையாளம் இருந்தது என சொல்லியிருக்கின்றது

எம்மை சாடியவர்கள் எல்லாம் முகத்தை எங்கேயும் வைத்துவிட்டு போகட்டும்

ஆதாரமில்லா செய்திகளையோ, பல பத்திரிகைகளில் வராத செய்திகளையோ இப்பொதுதளத்தில் பதிய முடியாது என்பது மட்டும் எப்போதும் நாம் சொல்லிகொள்வது

இப்படித்தான் எங்கள் தலைவி குஷ்பு அற்புத பிறவி, கிட்டதட்ட ஒரு அவதாரம் , காண‌ கிடைக்காத மானிட பிறப்பு , 5 ஆயிரம் வருடத்திற்கொருமுறை மலரும் அற்புத பூ , என்ற‌ மாபெரும் உண்மயினை அடிக்கடி சொல்லிகொண்டே இருக்கின்றோம்

இனியாவது நம்புங்கள்.