ஆதாரம் கேட்டால்

திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிராக கலாபனை செய்தான் என சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால் வெள்ளை பாதிரி எழுதியது இதோ என தூக்கிகொண்டு வருகின்றார்கள்

வெள்ளையன் எழுதியது எப்படி இருக்கும்? தாய்க்கு சமமான வேலு நாச்சியாரை மருதுபாண்டியரோடு இணைத்து அவன் கட்டிவிட்ட அவமான கதைகள் போலத்தான் இருக்கும்

தன்னை எதிர்த்த கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என கதைகட்டியது யார்? அவனே..

தன்னை எதிர்த்த யாரைபற்றி வெள்ளையன் நல்லவிதமாய் எழுதினான்?

இன்றும் செங்கிஸ்கான் அவனுக்கு கொடியவனே, ஐரோப்பாவினை ஆண்ட கலீபாக்கள் பற்றி பேசவே மாட்டார்கள்

அலெக்ஸ்டாண்டர் போரஸிடம் அடிபட்ட வரலாற்றையே மறைப்பார்கள், போரில் தோற்று கைதான நெப்போலியன் அவர்கள் மாவீரன்

இதெல்லாம் அவர்களின் மேம்பாவம், நாங்கள் உயர்ந்தவர்கள் எனும் ஒருவகை மனோபாவம்.

அட அவ்வளவு ஏன்?

இன்றுவரை சதாம் உசேன்,இந்தோனேஷியாவின் சுகர்தோ, அய்யதுல்லா கோமேனி வரை அவர்கள் கட்டிவிடும் கதை கொஞ்சமா?

யாரெல்லாம் அவர்களை எதிர்த்தானோ அவனெல்லாம் அயோக்கியன் என எழுதி வைப்பது வெள்ளையனுக்கு கை வந்த கலை

போர்த்துகீசிய பாதிரி எழுதியதெல்லாம் ஆதாரமென்றால்,கோவாவில் போர்ச்சுகீசியர் செய்த அட்டகாசம் பற்றி அந்த பாதிரி ஏன் எழுதவில்லை?

வேறு ஆதாரம் இருந்தால் கொடுக்கவும்

வெள்ளையனும் அவன் பாதிரி கூட்டமும் ஒரு இந்தியனை தரகுறைவாக எழுதியிருந்தால் அவனே மகா உத்தமனாக இருந்திருப்பான் என்பதால் திப்புவினை முழுக்க நம்பலாம்