ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

நீதிமன்றங்கள் எப்பொழுதும் நியாயமானவை தகுந்தவர்கள் தக்க முறையில் அணுகும்பொழுது அது தன் கடமையினை சரியாக செய்யும் என்பது மறுபடியும் நிரூபணமாகியிருக்கின்றது

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்கு தொடரபட்டது, வழக்கை தொடுத்தவர் உண்மையில் வாழ்த்துகுரியவர்

வழக்கை எடுத்த நீதிமன்றம் தொல்லியல் துறையினை விளாசிவிட்டது

ஏன் ஆதிச்சநல்லூர் ஆய்வுமுடிவினை அறிவிக்கவில்லை, இவ்வளவு நாளும் என்ன செய்தீர்கள் என மிக அதிரவைக்கும் கேள்விகளை கேட்டு விரைவில் அறிக்கை கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளது

ஆதிச்சநல்லூர் வரலாறு ஏன் மறைக்கபடுகின்றது? ஏன் இப்படி எல்லாம் முட்டுகட்டை இடுகின்றார்கள் என்றால் விஷயம் சாதாரணம் அல்ல‌

தமிழகத்தில் 1800களில் ஜெர்மானியரே முதலில் அறிவு ஏடுகள், தொல்பொருள் ஆய்வு என அலைந்தவர்கள்

அவர்கள் விமான சாஸ்திரா முதல் பல இந்திய ஏடுகளை கடத்தினார்கள், முதலில் விமான முயற்சி செய்து தோற்றது ஒரு ஜெர்மானியனே

தஞ்சை சரஸ்வதிமஹாலில் இருந்து அவர்கள் தேடிய அறிவு கொஞ்சமல்ல, அது அவர்களுகு ஹிட்லர் காலம் வரை கைகொடுத்தது

இங்கு கல்வெட்டு முதல் ஓலைசுவடி வரை தேடோ தேடு என அவர்கள் தேடினார்கள், அப்படி அவர்கள் தேடி சொன்ன விஷயம்தான் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜன் என்பதும், தென்னக தேரிகாட்டு மணலில் தாதுக்கள் அதிகம் என்பதும்

அண்ணாச்சி வைகுண்டராஜன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அப்படிபட்ட ஜெர்மானியர் ஐகோர் என்பவர்தான் ஆதிச்ச நல்லூரை முதலில் தோண்டினார், பல ஆய்வுகளை செய்தார், முடிவுகளை சொன்னார்

அது உலகை அதிர வைத்தது, ஆம் அது 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என முடிவு வந்தது. இரும்பை உருக்கும் கலை எல்ல, ஸ்டீல் எனப்படும் மிக நுட்பமான உலோகத்தை செய்யும் அளவு அங்கு அறிவார்ந்த சமூகம் இருந்தது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன‌

இரும்பு என்றல்ல வெண்கலம் முதல் பொன் வரை ஏராள பொருட்கள் கிடைத்தன‌

(இரும்பை எக்கு ஆக்கி கல்லை வெட்டி சிற்பம் செய்வது தமிழரின் கலை, சிற்பங்களில் தமிழகம் தனித்து நிற்க அதுதான் காரணம்

அந்த நுட்பம் 15 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு ஆதிச்சநல்லூரில்தான் உருவானது, அவ்வளவு அறிவான சமூகம் அங்கே வாழ்ந்திருக்கின்றது)

விஷயம் இன்னும் விஸ்வரூபமானது, ஆம் சிந்து சமவெளியில் கிடைத்த பொருட்களும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களும் ஒரே போல் இருந்தன‌

தொல்லியல் உலகம் அதிர்ந்தது, ஆம் முடிவு வந்தால் உலகின் மொத்த தொல்லியல் ஆய்வும் மாற்ற வேண்டிய சூழல் வரும்.

உலகின் மிக தொன்மையான நாகரீகமான மெசபடோமியாவினை விட பழமையானது ஆதிச்சநல்லூர் என்பது உறுதியாகும்

பழைய லெமூரியா காலத்தின் எச்சம் ஆதிச்சநல்லூர் என்கின்றது ஆய்வு முடிவு, அதன் பெயரே ஆதி+எச்ச+நல்லூர்

ஆம் மிக பழங்காலத்தின் எஞ்சிய எச்சம் அது

அந்த தாமிரபரணி முதலில் ஆதிச்சநல்லூரை ஒட்டியே ஓடி இருகின்றது, அங்கு நாகரீகம் தழைத்திருகின்றது, ஏதோ ஒரு கடற்கோளில் நிலப்பரப்பு மாறி போக தாமிரபரணி தள்ளி போயிருக்கின்றது

அதனால் ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த ஆதிச்சநல்லூர் இன்று வெறும் மண்மேடாக இப்பொழுது நிற்கின்றது

காவேரிபூம்பட்டினம் கடலுக்குள் போன காலங்களை போல முன்பு ஏதோ நடந்து இவை நிகழ்ந்திருக்கலாம்

இலங்கை இந்திய நிலபரப்பில் இருந்து பிரிந்த காலங்களில் நிகழ்ந்திருக்கலாம்

நிச்சயம் வெளிகொண்டுவர வேண்டியது ஆதிச்சநல்லூர் வரலாறு, ஆனால் அது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் தமிழக அரசியல் சூழலுக்கு அது சரியல்ல என்பதால் கனத்த மவுனமாகும்படி இந்திய அரசியல் கணக்கால் தொல்லியல் துறைக்கு இடப்பட்டிருக்கின்றது

அங்கு எடுக்கபட்ட சில பொருட்களை நெல்லை அருங்காட்சியகம், எழும்பூர் அருங்காட்சியகம் என வைத்தார்கள். பாசிமணி போன்றவைகளும் சில கற்கால ஆயுதங்களும் அதில் அடக்கம், இப்பொழுதும் காணலாம்

ஆனால் உலகில் முதன் முதலில் இரும்பை பயன்படுத்திய அந்த ஆதிச்சநல்லூரின் மகா முக்கிய பொருட்களை கண்ணிலே காட்டமாட்டார்கள்

அதை உறங்கவிடுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்

இப்பொழுது நீதிமன்றம் கேள்வி கேட்டிருகின்றது, ஆனால் அந்த கல்லை எடுத்தோம் இந்த தாழியினை எடுத்தோம் இது 2000 ஆண்டுக்கு முற்பட்ட நாகரீகம் என்பார்களே தவிர உருப்படியாக பதிலளிக்கமாட்டார்கள்

முன்பு 1500 ஆண்டுகளுக்கு முன்பான நாகரீகம் என்றார்கள்? அட ராஜராஜ சோழனே 1000 வருடத்திற்கு முன்பிருந்தான் கிட்டதட்ட 2500 ஆண்டுகால தமிழன் நாகரீக ஆதாரம் இருக்கின்றது, அதில் எல்லாம் ஆதிச்சநல்லூர் இல்லை இது ஆக பழமையானது என்பதால் உண்மையினை சொல்லுங்கள் என கேட்டால் தொல்லியல் துறையிடமிருந்து பதில் வராது

ஆனால் தொடர்ந்து நீதிமன்றம் நெருக்கடி கொடுத்து இன்னும் பாதுகாக்கபடும் ஆதிச்சநல்லூர் பகுதிகளை நீதிமன்ற வழிகாட்டல்படி தோண்ட செய்தால் நிச்சயம் பல வரலாறுகள் வெளிவரும், அது உலகினை புரட்டி போடும்

ஆனால் அதற்கான போராட்டம் நீண்டது

என்னதான் திமுக போன்ற திராவிட கட்சிகள் மேல் அபிமானம் இருந்தாலும், கலைஞர் மேல் பெரும் மரியாதை இருந்தாலும் இந்த இடத்தில் அதை கழற்றி எறியத்தான் வேண்டும்

ஆம், தமிழ் தமிழர் என கட்சி நடத்தி ஆட்சிக்கும் வந்த அவர்கள் இந்த உண்மையான தமிழனின் வரலாற்று இடத்தை தோண்டவோ அதை வெளிகொண்ரவோ கிஞ்சித்தும் முயற்சி எடுக்கவில்லை

இன்னும் ஆழமாக சொல்லவேண்டுமென்றால் சோழநாட்டு வரலாறுமேல், காவேரி தஞ்சை, காவேரிபூம்பட்டினம் என கவனம் செலுத்திய கலைஞர் ஆதிச்சநல்லூரை கண்டுகொள்ளவுமில்லை

தனக்கும், தன் மேலான ஊழலுக்கும் பெரும் வழக்கறிஞர்களை கொண்டு வாதிட்டவர்கள் ஆதிச்சநல்லூர் பக்கம் செல்லவே இல்லை என்பது அவர்களுக்கு பெரும் கரும்புள்ளி

அதற்கு காரணமும் இருந்தது, ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்ற பானைகளை , ஓடுகளை ஆய்வு செய்ததில் அதில் இந்து கடவுள் படங்களும் இருந்தன‌

ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவன் தமிழன் அவன் மதம் இந்து என்ற முடிவும் இருந்தது, சிவன் முதல் முருகன் வரை பல படங்களும் ஆதாரங்களும் கிடைத்தன, உருவங்களும் கிடைத்தன‌

ஆதிச்சநல்லூர் தோண்டபட்டால் தமிழன் இந்து என்ற அடையாளம் நிலைத்துவிடும்.

எந்த பகுத்தறிவுவாதி இதை விரும்புவான்? அவர்களும் கனத்த அமைதி ஆனார்கள்

நெல்லை பக்கம் இருந்தும் பிரதான தமிழக அரசியல் தலைவர்கள் உருவாகாமல் போனதும் ஒரு காரணம், அழுத்தம் கொடுக்கவும் யாருமில்லை

காமராஜர் நல்லவர்தான் ஆனால் இக்கால பாஷயில் சொல்வதென்றால் ஒரு ஆர்.எஸ்.எஸ், அவர் என்றல்ல பாரதி, வ.உ.சி எல்லாமே அந்த ஆர்.எஸ்.எஸ் கோஷ்டியே

இதனால் ஆதிச்சநல்லூர் தமிழர் வரலாற்றை வெளிகொண்டுவர யாரும் இல்லாமலே போய்விட்டார்கள்

தேவநேயபாவணர் போன்ற சிலர் எழுப்பிய குரலும் கானகத்தில் தவளை ஒலி போல கண்டுகொள்ள ஆளில்லாமல் போயிற்று

ஆதிச்சநல்லூர் மர்மம் வெளிவரகூடாது என்ற தொல்லியல் துறையின் கணக்கும், இங்கு நல்ல தமிழ் தலைவர்கள் உருவாகாத கணக்குமாக சேர்ந்து அதை உறங்க வைத்தன‌

இப்பொழுது நீதிமன்ற உருவில் ஆதிகால தமிழர்களின் ஆன்மா தொல்லியல் துறைக்கு கதறல் கோரிக்கை வைக்கின்றது

வந்திருப்பது நீதிமன்ற உத்தரவல்ல, மாறாக ஆதிதமிழனின் கேவல் நிறைந்த கெஞ்சல், எங்களை உலகிற்கு அறிவியுங்கள் என்ற இயலாமையின் அழுகை

இதற்கு துணைநிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை, தலையாய கடமை

உலகின் தனிபெரும் நாகரிகமான ஆதிச்சநல்லூரில் உண்மையான ஆய்வு முடிவு வெளிவரும் பொழுது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை

அந்த ஜெர்மானியனான ஐகோர் என்பவனே அந்த ஆய்வினை 1876களில் தொடங்கி வைத்தான், அவனுக்கு நன்றி சொல்லி கடமையாற்ற கிளம்புவோம்

உண்மையான முடிவுகள் வரட்டும், தமிழர் பெருமை நிலைக்கட்டும்,

உலகின் முதல் நாகரீகம் தமிழர் நாகரீகம் அது ஒரு இந்து சமய நாகரீகம் என்பதும் வெளிவரட்டும்