ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன்
அந்த வெற்று மாறனுக்கு சில ஆதரவுகள் கிளம்புகின்றன, அந்த காலத்தில் சோழர்கள் அபரிமிதமான பிராமண ஆதரவு கொண்டிருந்தார்களா, அந்த கரிகாலன் விவகாரத்தில் என்னதான் நடந்தது, நிரம்ப படித்தவரான பாலகிருஷ்ணன் ஐ.ஏ.ஸ் கூட ஒருமாதிரியாக பேசுகின்றாரே ஏன் என கேட்டார்கள் அன்பர்கள்
நாமும் அவர் வீடியோவினை கண்டோம், சில பதில் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம்
அவர் சொல்வது போல ராஜராஜசோழனும் ராஜேந்திரமும் மட்டும் யாகமோ வழிபாடுகளோ பார்ப்பனர்களுக்கு இடமும் வீடும் கொடுக்கவில்லை அது பாரத வழமையாய் இருந்தது, அதை முற்கால சோழர்கள் செய்தார்கள், பாண்டிய பெரும் வழுதி செய்தான், சேரமன்னர்கள் மிக பெரிதாக செய்தார்கள்
அந்த பார்ப்பனர்களே பஞ்சாங்கம் பார்த்து வெள்ளம், வறட்சி,போர், வியூகம், ஆலயம், நல்ல நேரம் என என்னென்னவோ சொல்லிகொடுத்தார்கள், அது அரசனுக்கும் நாட்டுக்கும் நன்மை கொண்டுவந்தது, அதனால் அவர்களை அருகில் வைத்து கொண்டார்கள்
இது பாரதம் முழுக்க இருந்த நிலை, அவர்களுக்கான குடியிருப்பே மங்கலம் என்றாயிற்று, சதுர்வேதி மங்கலம் போன்றவை அப்படி வந்தவையே
ராஜராஜ சோழனுக்கு முந்தைய நாயன்மார் வரிசையிலே பல பிராமணர்கள் உண்டு, அதன் முற்காலத்திலே உண்டு
அதனால் ராஜராஜ சோழனே பார்பனர்களை அழைத்து வந்தான் என்பதெல்லாம் பொய்
பாலகிருஷ்ணன் சொன்ன அடுத்தவாதம் ஆதித்த கரிகாலன் கொலைபற்றியது
அது பாண்டியருக்கும் சோழருக்கும் சண்டை நடந்த காலமல்ல, அது பாண்டியர் சேரர் சிங்களவர் கூட்டணிக்கும் சோழருக்கும் நடந்த யுத்தம்
அப்பொழுது சேரநாடு வழுவிழந்தது, அங்கிருந்த குருகுலத்து முன்குடுமி அந்தணர்கள் பாண்டிய நாட்டுக்கு வந்தார்கள், அவர்களை பாண்டிய மன்னன் வீரபாண்டியன் ஆதரித்தான்
சேரநாட்டு அந்தணர்கள் கொஞ்சம் நுணுக்கமானவர்கள் அவர்களின் போர்கலையும், வர்ம கலையும் இன்னும் சூட்சுமான விஷயங்களும் தனிதன்மையானவை
அவர்கள் அதை கொண்டு தங்களுக்கு ஆதரவளித்த பாண்டியனை பெரும் பலமிக்கவனாக்க முயன்றார்கள், இங்குதான் அஞ்சினான் ஆதித்த கரிகாலன்
ஒரு போர் தொடங்குமுன் சில சமரசங்கள் பேசபடும், அப்படியே போர் முடிந்தபின்பும் பேசபடும்
அப்படி போர் என முடிவாகி அதில் தோற்று வீரபாண்டியன் தலைமறவாக இருந்தான் அப்பொழுது பேச்சுவார்த்தை நடந்தது, சேரநாட்டு அந்தணருக்கும் சோழருக்கும் நடந்தது
ஆதித்த கரிகாலன் முதலில் சரியாகத்தான் பேசினான், களத்தில் அல்லாதவனையும் ஆயுதம் அல்லாதவனையும் கொல்லுதல் அறமாகாது எனும் அக்கால விதிக்கு கட்டுபட்ட்வன் போல் நடித்தான்
சில சமாதான ஒப்பந்தம் பேசலாம் என நாளை இழுத்துகொண்டே இன்னொரு பக்கம் வஞ்சகமாக காட்டுக்குள் மறைந்திருந்த வீரபாண்டியனை அக்கால விதிகளை மீறி கொன்றான்
நிச்சயம் அது அதர்மம், பெரும் அதர்மம்
அதற்கு பழிவாங்கத்தான் அதாவது நீ எங்களை வஞ்சித்தாய் அல்லவா? நாங்கள் உன்னை வஞ்சிப்போம் என களமிறங்கிய சேரநாட்டு அந்தணரும் பாண்டிய குழுக்களும் ஆதித்த கரிகாலனை திட்டமிட்டு சரித்தன
அதன் பின் ஆட்சி மதுராந்தகனிடம் சென்றது, ராஜராஜன் எனும் அருள்மொழி நாடோடியாகத்தான் திரிந்தான்
உண்மையில் ஆதித்த கரிகாலன் கொலையில் யாரெல்லாம் உண்டு என்பதை அவன் நாடோடியாக அலைந்தே கண்டறிந்தான் அதில் சோழநாட்டு தொடர்புகளும் உள்வீட்டு விவகாரமும் இருந்தது
அவன் பாண்டியநாட்டின் பெரும் ஆதரவாக சேரநாடு இருப்பதை உணர்ந்தான், எல்லா ஆபத்துக்களையும் எல்லா பகைவர்களையும் அளந்துவிட்டுத்தான் அரியணை ஏறினான்
அப்படி ஏறியவனுக்கு நிச்சயம் பாண்டியரும் சேரரும் தங்கள் வம்சத்தை அழிக்க நினைப்பார்கள் என தெரியும், அதனால் முந்திகொண்டு சேரநாட்டை தாக்கினான்
அப்பொழுதுதான் அவனின் “காந்தளூர் சாலை” தாக்குதல் நடந்தது, சேரநாடு பலவீனமானது
சேரநாட்டை அடக்கினால் பாண்டியர் தானாக அடங்குவார்கள் என்ற அவன் கணக்கு சரியானது, அப்படியே இலங்கையிலும் ஈழ மன்னர்களையும் சிங்களவரையும் அடக்கினான்
அதன் பின்பே தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் விசாரணையினை தொடக்கினான், ஆனால் கைது செய்யபட்ட ரவிதாசன் போன்றோரை கொல்லாமல் மொட்டை அடித்து விரட்டிவிட்டான்
அதற்கு காரணம் அவர்கள் பிராமணன் என்பதால் அல்ல விஷயம் வேறு
அக்காலத்தில் அடிக்கடி போர்கள் நடந்ததால் சில விதிகள் வகுக்கபட்டன. அந்தணர், பசு, பெண்கள், குழந்தைகள் இவர்களை கொல்ல கூடாது என்பது
போர்காலம் தவிர பிராமணர் தவறு செய்தால் தண்டனை நிச்சயம், கொல்ல கூட செய்யலாம் ஆனால் அதனில் சில விதிவிலக்குகள் இருந்தன
பெரும் அறிஞர்களையும், குருகுல விற்பனர்களையும், பெரும் வீரர்களை உருவாக்கும் குருமார்களையும் கொல்ல கூடாது என்பது, அதற்கு காரணம் அவர்களை கொன்றால் அந்த பெரும் அறிவினை இழக்க வேண்டிவரும் என்பதால்
இன்று எதிரி முகாமில் இருப்பவர் நாளை நம்முகாமுக்கே வரலாம் இன்னும் அவர்களை நாம் பயன்படுத்தலாம் அல்லது யாரோ ஒருவருக்கு அக்கலை பயன்படும் எனும் ரீதியில் அறிஞர்களை கொல்ல கூடாது எனும் விதி இருந்தது
இப்பொழுதும் பெரும் விஞ்ஞானிகள் இன்னொரு நாட்டில் சிக்கினால் கொல்லமாட்டார்கள், அந்த அறிவினை நாசமாக்க விடமாட்டார்கள்
இதுதான் அக்காலத்தில் நடந்தது, கொலையில் சிக்கியவர்களெல்லாம் பெரும் வித்தகர்கள்
இன்னொன்று அவர்களிடம் நியாயம் இருந்தது, ஆதித்த கரிகாலன் சத்தியத்தை மீறினான் எனும் உண்மை இருந்தது
ராஜராஜன் அஞ்சிய பெரும் விஷயம் இந்த அந்தணர்களை கொன்றால் தன் நாட்டு அந்தணர்க்கும் ஆத்திரம் வரும், சேரநாடு கொந்தளிக்கும் இதெல்லாம் தனக்கு சரியானது அல்ல என உணர்ந்துதான் விடுவித்தான்
அவன் அந்த பிராமணர்களை விடுவிக்க அவர்களின் சாதி துணைக்குவரவில்லை, அவர்களின் பெரும் அறிவும் குருமார்கள் என அவர்கள் இருந்த ஸ்தானமுமே காரணம்
ராஜராஜன் அவர்களை விடுவித்து தன்னையும் காத்து கொண்டதும் நடந்தது
பின் என்னாயிற்று?
ராஜராஜசோழன் எல்லோரையும் அடக்கி பெரும் மன்னனாக வாழ்ந்து முடிந்தான், அவன் மகன் அவனைவிட பெரும் மன்னனாக வாழ்ந்தான்
ஆனால் ஆதித்த கரிகாலன் பாண்டியருக்கு செய்த அநீதிக்காக பாண்டிய வம்சமும் சேரநாட்டு அந்தணர்களும் கருவிகொண்டே இருந்தனர்
அடுத்த 75 ஆண்டுகளில் சேரநாட்டு அந்தணர்கள் தங்களின் பயிற்சியால் மிகசிறந்த வீரனை உருவாக்கினார்கள், அவன் எல்லா வீரகலைகளிலும் தேர்ந்தான்
குதிரைகள் முதல் யானைகள் வரை சைகையிலே அடக்கும் பயிற்சி இருந்தது, வர்மகலையில் கை தேர்ந்தவனானான், நோக்குவர்மமெல்லாம் அவனுக்கு எளிதாய் வந்தன
சோழ வம்சத்தை பழிவாங்க அவனை பெரும் வீரனாக சக்திவாய்ந்தவனாக மாற்றியிருந்தார்கள் சேரநாட்டு அந்தணர்கள்
ஆம் அவனே ஜடாவர்ம சுந்தரபாண்டியனாக எழுந்தான், சோழ வம்சத்தை முற்றிலும் முடித்து ராஜராஜசோழனின் பெரும் சாம்ராஜ்யத்தை தன் காலடியில் வைத்தான்
அவன் ஆட்சியில் அவனுக்கு எதிரிகளே இல்லாவண்ணம் எங்கும் அவன் கொடிபறந்தது
சோழர் பரம்பரையினையே அவன் முடித்து வைத்து அவன் உருவாக்கிய பெரும் பாண்டிய சாம்ரஜ்யம் 130ம் ஆண்டை தொட்டபொழுதுதான் மாலிக்காபூர் மதுரை வந்தான், அவனை தொடர்ந்து துக்ளக் வந்தான்
துக்ளக் நியமித்த சுல்தானை ஒழிக்கத்தான் நாயக்கர்கள் வந்தார்கள், பின் வெள்ளையன் ஆட்சி வந்தது
ஆக ஆதித்த கரிகாலன் கொலையும் அதற்கு 100 ஆண்டுகள் கழித்து பாண்டியர் எழுந்து சோழவம்சத்தை கருவறுத்ததுமே வரலாறு
இங்கு சொல்லவருவது பிராமணர்கள் எக்காலமும் இருந்தார்கள், மூவேந்தரிடம் மட்டுமல்ல எல்லா மன்னர்களிடமும் இருந்தார்கள், ஆனால் மன்னன் அவர்களை பயன்படுத்தினானே தவிர அவர்கள் மன்னனை ஆட்டுவிக்கவில்லை
ராஜராஜனின் தளபதி பிரம்மராயர் கூட பிராமணரே
ஆக வெற்றிமாறனின் உளறலுக்கு பதிலளிக்கின்றேன் என சில விஷயங்களை அவருக்கு ஆதரவாக சொன்னால் அந்த பாலகிருஷ்ணனும் உளறுகின்றார் என்பதே அர்த்தம்
இந்துமதம் என்பது அந்நியன் வைத்த பெயரே, ராஜராஜசோழன் சைவன் அதனால் இந்து அல்ல என்பது இந்திய ராணுவத்தின் தரைபடை வீரனை நோக்கி அவன் தரைபடை வீரன் இந்திய ராணுவம் அல்ல என சொல்வது போல் மடமையானது
இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே லிங்கமே, ஒரே வகை திருநீறே, ஒரே கைலாசமே, அந்த லிங்கத்தை வழிபட்டவன் இந்து எனும் சனாதர்மத்தை பின்பற்றியவனே அதை ஏன் பாலகிருஷ்ணன் போன்றோர் சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியம்
Outstanding write-up explanation ! Hats off!!