ஆன்மீக அரசியல் என்பது எடுப்பார் கைப்பிள்ளை

ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும், இல்லை நல்லாட்சி தருவார் என நம்புபவர்க்கு ஆதரவு தெரிவிக்கட்டும்

அதை விடுத்து, இந்த தமிழருவி மணியன், குருமூர்த்தியிடம் எல்லாம் ஆலோசனை கேட்டால் சத்தியமாக உருப்படாது

தமிழருவி மணியன் எத்தனை முதல்வர்களை உருவாக்கினார்? ஒன்றுமில்லை, விஜயகாந்தையே சாய்த்தவர் அவர்

இந்த குருமூர்த்தி எத்தனை முதல்வரை உருவாக்கினார்? ஒரு வார்டு கவுன்சிலர் கூட அவரால் உருவாகியிருக்க முடியாது

ரஜினி என்பவர் தனிபலம் உள்ளவர், அவர்தான் அடையாளம், அந்த சொல்தான் ரசிகர்களின் துடிப்பு பலம் எல்லாம்

அவர் ஏன் இவர்கள் பின்னால் செல்ல வேண்டும்? இவர்களிடம் ஆலோசனை கேட்ட யாரும் உருப்படவில்லை என தெரிந்துமா அவர்கள் பின் செல்ல வேண்டும்?

ஆன்மீக அரசியல் என்பது எடுப்பார் கைப்பிள்ளை என தமிழகம் முடிவு செய்யாதா?

ஆன்மீக அரசியல் இப்பொழுது “விபூதி அரசியல்” ஆகின்றது, யாரும் ஒரு பிடி எடுத்து ரஜினி முகத்தில் அடிக்கலாம்