ஆபிரிக்கா நாடுகளுக்கு மோடி பயணம்
உகாண்டா செல்கின்றாராம் மோடி , அங்கு எண்டபே நகருக்கும் செல்கின்றாராம்
எண்டபே நகரில்தான் இஸ்ரேலின் மிக புகழ்பெற்ற மீட்பு நடவடிக்கையான ஆப்பரேஷன் என்டபே நடந்த விமான நிலையம் இருக்கின்றது
அதை பார்க்கும்பொழுது காந்தகாரில் ஏர் இந்திய விமானம் கடத்தபட்டிருந்தபொழுது, லஷ்கர் தீவிரவாதியினை கொடுத்து விமானத்தை ஜஸ்வந்த் சிங் மீட்டுவந்த காட்சி மோடி மனதில் வந்து போகாமல் இருக்காது.
எண்டபே இஸ்ரேலின் தீரத்தை சொல்லி நிற்கும் விமான நிலையம், காந்தகார் இந்திய உளவுதுறையின் தவறை சுட்டி காட்டி நிற்கும் வடு
ஆயினும் விடுவாரா மோடி?
“இந்த விமான நிலையம் உகாண்டா வரலாற்றின் அவமானம் அல்லவா? இன்னுமா இதை விமான நிலையமாக வைத்திருக்கின்றீர்கள்? 200 பசுமாடு தருகின்றேன் மாட்டு தொழுவமாக மாற்றிவிடுங்கள்” என அவர் சொன்னாலும் சொல்லலாம்
ருவாண்டா சென்றார் மோடி : செய்தி
ருவாண்டா கொடூரமான இன படுகொலைகளுக்கு பெயர் பெற்ற நாடு, அங்கு செல்பவர் எப்படிபட்டவராக இருக்க முடியும்?
சொந்த நாட்டில் 13 பேர் சுட்டு கொல்லபட்டும் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத பிரதமாரகத்தான் இருக்க முடியும்.
200 மாடுகளை ரூவாண்டாவுக்கு மோடி பரிசளிக்கிறார் : செய்தி
அந்த மாடுகளை பரிசளித்தால் போதுமா? பொறுப்பாக வளர்க்க வேண்டாமா?
அந்த ஏழைத்தாயின் மகன் அங்கே தங்கி இருந்து அம்மாடுகளை மேய்க்கட்டும், உதவியாளர் தேவை என்றால் தமிழக முதல்வரையும் அழைத்து அருகில் வைத்து கொள்ளட்டும்.
இருவரும் இங்கே இருந்தும் கிழிக்கபோவது ஒன்றுமில்லை..