ஆப்கனில் 7 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்..
ஆப்கனால் 1970 வரைக்கும் சிக்கல் இல்லை, சோவியத் ரஷ்யா அங்கு கால்பதித்தபின் இந்தியாவிற்கும் சோவியத்திற்கும் இடையில் பாகிஸ்தான் என்றொரு தேசம் கிடுக்குபிடியில் மாட்டியது
பின் அமெரிக்க விளையாட்டு இன்னபிற சிக்கல்களால் ரஷ்யா வெளியேறியது
அதன் பின் பாகிஸ்தானை இன்னொரு பக்கம் இருந்து அடிக்கும் வாய்ப்பினை இந்தியா இழந்தது, பாகிஸ்தானும் தாலிபன் போன்றோரை வளர்த்து அங்கு தன் பிடியினை இறுக்கிற்று
இப்பொழுது தாலிபன்களின் வீழ்ச்சிக்கு பின் இந்தியாவும் அங்கு பல விஷயங்களை செய்கின்றது
ஆப்கனின் தேவை இந்தியாவிற்கு பல வழிகளில் வேண்டும், அங்கு இருந்து பாகிஸ்தானை கவனிக்கலாம், பாகிஸ்தான் எல்லையான பாகிஸ்தானின் தலைவலியான பலுசிஸ்தான், வர்சிஸ்தான் பகுதிகளில் சில காரியங்களை செய்யலாம்
காஷ்மீரில் பாகிஸ்தான் என்ன செய்கின்றதோ அதை நாம் பலுசிஸ்தானில் செய்யலாம்
இதற்காகத்தான் ஆப்கன் நிதி என இந்தியா அள்ளிகொடுத்து உள்ளே நுழைந்தது, ஆப்கனுக்கு ஏன் நிதி என பதர்கள் முன்பு பொங்கின, அதன் அர்த்தம் இதுதான்
இதனால் இந்தியாவினை ஆப்கானிலிருந்து விரட்ட பல விஷயங்களை பாகிஸ்தானின் அடிவருடிகள் செய்வார்கள்
இந்திய தூதரக குண்டுவெடிப்புகள் முதல் பல விஷயங்கள் இதற்காகத்தான்
இப்பொழுது அங்கு இந்திய உதவியுடன் கட்டபட்ட மின் நிலையத்தில் பணியாற்றிய 7 பேரை தாலிபன் கடத்தி இருகின்றார்கள்
அவர்களை மீட்கும் பணி நடக்கின்றது. எதற்காக கடத்தினார்கள்? கோரிக்கை என்ன என்பது பற்றி இன்னும் தகவல் இல்லை
தாலிபான்களிடமிருந்து நிச்சயம் கோரிக்கை வரும் என்பது தெரியும்.
ஆப்கனில் இருந்து இந்தியாவினை விரட்ட நடக்கும் விஷயங்கள் இவை, ஆனால் இதற்கெல்லாம் இந்தியா அசையாது
இந்தியர் 7 பேரும் நலமாக திரும்ப இத்தேசம் பிரார்த்திக்கின்றது.