ஆப்கானிஸ்தான் 100ம் சுதந்திரதினம்
ஆப்கானிஸ்தான் தன் 100ம் சுதந்திரதின விழாவினை கொண்டாட முடியாமல் வழக்கமான உள்நாட்டு சண்டையில் அழுது கொண்டிருக்கின்றது
முன்பொரு காலத்தில் மகாபாரத காலத்தில் அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது, காலம் மாறும் பொழுது எல்லைகளும் மாறும் அப்படி மாறிற்று.
உண்மையில் ஆப்கனின் அமைவிடம் முக்கியமானது, சீனாவினை எல்லையாக கொண்டிருப்பதாலும், இந்தியாவில் நுழைவாயிலாக இருப்பதாலும் அதன் மீது ஐரோப்பியருக்கு ஆசை அதிகம்
அலெக்ஸாண்டர் அதனை பிடித்திருந்தான் நெடுநாளாக அது கிரேக்கர் கையிலே இருந்தது, பின் குஷாணர், மங்கோலியர் என பலர் கையில் இருந்து பின் தைமூர், அவனின் முரட்டு வழி தோன்றல்கள் கோரி, கஜினி முகமது போன்றோர் உருவாயினர்
இன்று ஆப்கன் என்பது சுத்தமான இனம் அல்ல, கிரேக்கம், மங்கோலியர், உஸ்பெக் என பல இனங்களின் சமத்துவபுரம் என்பதால் ஒருமாதிரியான முரட்டு ஆப்கனாக உள்ளது
வெள்ளையன் பஞ்சாபை பிடித்ததில் இருந்து அவனுக்கு ஒரு ஆசை வந்தது, ஆப்கனை பிடித்து அப்படியே மேற்கு நோக்கி சென்று ஐரோப்பாவினை அடைந்து நிலம் வழியாக இந்தியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் பெரும் திட்டம் அவனிடம் இருந்தது
அப்படியே ஈரானை பிடித்து பாக்தாத் வழியாக வெள்ளையன் சென்றிருக்கலாம் ஆனால் துருக்கிய சாம்ராஜ்யம் வெள்ளையனை விட பலமாய் இருந்தது, அவனிடம் மோத பிரிட்டிஷார் அஞ்சினர்
இதனால் ஆப்கனை பிடித்து அப்படியே மேற்கு நோக்கி செல்லும் திட்டம் இருந்தது, ஆப்கன் போரை பிரிட்டிசார் தொடக்கினர்
இதற்கு பிரிட்டிசாருக்கு உதவியதால்தான் காஷ்மீரே ஹரிசிங் எனும் மன்னரின் முன்னோருக்கு கிடைத்தது
ஒருவழியாக ஆப்கனை பிடித்து வெள்ளையன் இன்னும் மேற்கு நோக்கி செல்ல முயன்றபொழுதுதான் ரஷ்ய புரட்சி வெடித்து அது பெரும் சக்தியாக எழும்பியது
அத்தோடு வெள்ளையன் யோசித்தான், இனி அச்சாலை சாத்தியமில்லை என்பதால் ஆப்கன் அவனுக்கு உபயோகம் இல்ல்லாமல் இருந்தது, அந்த முரட்டு கூட்டத்தை கட்டுபடுத்த அவனுக்கும் சிரமமாய் இருந்தது
இதனால் 1919ல் ஆப்கனுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு இந்தியாவிற்கே வந்துவிட்டான்
எல்லா நாடும் எப்படி சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடும் பொழுது ஆப்கனோ தன் 100வது சுதந்திர நாளை குண்டுவெடிப்பு சாவுகளோடு அழுது நினைத்து கொண்டிருக்கின்றது
நாடு நலம்பெற மக்களே பொறுப்பு, மலேசிய மக்கள் தங்கள் சுதந்திர திருநாளை வரவேற்க வீடு, கார், அலுவலகம் என எல்லா இடத்திலும் அவர்களின் தேசியகொடியினை பறக்கவிட்டு நாட்டுபற்றை வெளிபடுத்துகின்றார்கள், இதுவும் இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வாழும் நாடு
ஆப்கனும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடு ஆனால் எவ்வளவு பரிதாபம்
மனம் போல் வாழ்வு என்பார்கள், அது இதுதான்
மதநெறிக்கும் மதவெறிக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு
மதநெறி எல்லா மனிதரையும் அரவணைத்து வாழ சொல்கின்றது, மதவெறி புனிதமான பண்டிகைகளை கூட மக்கள் கொண்டமுடியாதபடி பெரும் ரத்த ஆறுகளை ஓட வைக்கின்றது
அது இந்த விவகாரங்களை எல்லாம் கவனித்தால் ஒன்று புரியும்
மதம் , இனம், மொழி எல்லாவற்றையும் விட நாடு முக்கியம் என நினைக்கும் மாந்தர்கள் கொண்ட நாடுகள் வாழ்வாங்கு வாழ்கின்றன
நாட்டை விட மற்றவை முக்கியம் என கருதும் நாடுகள் சீரழிகின்றன, ஆப்கன் அதற்கு மிகபெரும் உதாரணம்