ஆயிரம் சமாதானம் காரணம் சொன்னாலும் ஒரு விஷயம் மகா உண்மை
ஆயிரம் சமாதானம் காரணம் சொன்னாலும் ஒரு விஷயம் மகா உண்மை
உண்மையில் பெரும்பான்மை தமிழர்களுக்கு என்ன காரணத்தினாலோ கலைஞர் திமுகவின் மேல் பெரும் அபிமானமில்லை, அது காமராஜரை தோற்கடித்த விதமா இல்லை வேறு வகையான விஷயமா என இன்றுவரை பதில் இல்லை
கலைஞரின் திமுகவினை எதிர்த்தார் என்பதற்காக பின் ராமசந்திரனை விழுந்து விழுந்து ஆதரித்தார்கள், பின் ஜெயா என அது தொடர்ந்தது, ஜெயா மீது ஊழல் வழக்குகள் வந்தாலும் கலைஞர் பின் தமிழகம் திரளவில்லை
இது கலைஞருக்கு மிக நன்றாக தெரியும், தன் வாக்கு வங்கி என்பது எது என்பதும் புரியும், இதனால்தான் ஜம்போ கூட்டணி இன்றி அவர் தேர்தலை எதிர்கொண்டதில்லை
யார் சிக்குவார்களோ அவர்களை மிக சாதுர்யமாக பயன்படுத்திகொண்டு நகர்வதில் மனிதர் கில்லாடி,
ஓட்டை மட்டையினை கொண்டு இடம்பார்த்து சிக்ஸர் அடிப்பதில் வித்தகர் கலைஞர், திமுகவிற்கு உள்ள வாக்குவங்கியினை கொண்டு அவர் பலமுறை வென்றது எல்லாம் அப்படித்தான்
அவரின் சாதுர்யத்திலே கட்சி நின்றதே அன்றி வேறு விஷயம் அல்ல
இன்றும் பாருங்கள், அதிமுக வோட்டு ஜெயா இல்லாநிலையில் அதிமுக உள்ளேயே விழுந்திருக்கின்றதே அன்றி திமுக பக்கம் திரும்பவவே இல்லை
திமுக மிக பெரும் அளவில் தன்னை புதுப்பித்துகொள்ள வேண்டிய நேரமிது, வியூகங்களை மாற்றவேண்டிய நேரமிது இல்லாவிட்டால் மிகபெரும் சிக்கல்களை பின்னாளில் சந்திக்கலாம்