ஆயிரம் மடங்கு அழகு
எங்கு போனாலும் உயர்ந்த பட்டுடுத்தி, கவனமாக ஒப்பனையிட்டு, தலையெல்லாம் பூச்சூடி , நகையெல்லாம் பூட்டி கிட்டதட்ட கிளியோபாட்ரா தோரணையில் வருபவர் அவர்
பெரும் போராட்டமோ இல்லை நாட்டுக்காக சில கருத்துக்களோ சொன்னதே இல்லை அவர், தந்தை வழியில் அவரால் மட்டுமே அரசியலுக்கு வந்தவர்
நாகரீகமான மேடைகள், மேலிடத்தோர் வீற்றிருக்கும் அவைகள் தவிர அவரை காணமுடியாது
ஆனால் டாக்டராயினும் எங்கு சென்றாலும் பரட்டை தலையுடனும், வயலுக்கு செல்லும் பெண்ணின் பாமர தோற்றத்துடனும் மனதில் பட்டதை மிக தைரியமாக சொல்லியும்
தந்தை தடுத்தும் மாற்றுகட்சியில் சேர்ந்து அங்கும் இடம்பிடித்து இன்று தனியொருத்தியாய் பல கல்லடி சொல்லடிகளை அனுதினமும் தாங்கி , கொஞ்சமும் அசராமல் தன் வழியில் செல்பவர் இவர்
பாமரத்தி, ஆடை முதல் தோற்றம் பேச்சுவரை பராரி கோலமே, துளியும் மேல்குடி பேச்சு நடையோ ஆங்கில கலப்போ அவரிடம் தெரியாது , இவ்வளவிற்கும் மருத்துவர்
இதில் யார் அழகு என்றால், மிக தைரியமாக சொல்லலாம் நிச்சயம் தமிழிசைதான் அழகு
தமிழச்சி கமலஹாசன் வகையறா, தமிழிசை ரஜினி , கலைஞர் வகையறா
தன் இயல்பான தோற்றம், இயல்பான பேச்சு என கொஞ்சமும் போலியின்றி வளையவரும் தமிழிசை அந்த தமிழச்சியினை விட ஆயிரம் மடங்கு அழகு