ஆயுத பூஜை மோசடி என பொங்கும் பெரியாரிஸ்ட்டுகள்..
இந்த பெரியாரிஸ்டுகள் , சில பகுத்தறிவு வாதிகள் எல்லாம் ஆயுத பூஜை மோசடி என பொங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதாவது தமிழ்நாட்டில் பூஜை விழா என்று ஒன்று கிடையவே கிடையாதாம், எல்லாம் மோசடியாக புகுத்தபட்டதாம்.
சங்க காலத்திலே இந்திர விழா என்று ஒருவிழா, அதுவும் புத்தமதம் கோலோச்சிய காலத்திலே தமிழகத்தில் கொண்டாடபட்டது சிலப்பதிகாரத்திலே உண்டு, பூந்தொடை விழா என குழந்தைகளை குருகுலத்தில் சேர்க்கும் விழா அது.
அதுதான் இன்றைய விஜயதசமி. ஆக அன்றே இம்மாதிரியான விழாக்கள் இத்தேசம் முழுக்க ஒரே நாளில் கொண்டாடபட்டிருக்கின்றது
கவிசக்கரவர்த்தி கம்பன் இந்நாளில் சரஸ்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வான் என்கின்றது இலக்கியங்கள்.
தமிழர் இலக்கியங்களில் இதெல்லாம் காண கிடக்கின்றன, தமிழ் இலகியங்கள் பெரும்பாலும் பக்தி இலக்கியங்களே.
தமிழர் வாழ்வு மதம் சார்ந்ததாகவே அந்நாள் முதல் இந்நாள் வரை இருக்கின்றது, பூஜா விழாக்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கின்றன.
ஆக இந்த பகுத்தறிவு வாதிகள் சும்மா, இல்லை இல்லை என தலையாட்டுவதால் அது இல்லாமலே போகாது.
இன்னும் சிலர் தொடங்கியிருக்கின்றார்கள், தமிழன் எதை கண்டுபிடித்தான்? எந்த கருவி சமைத்தான்? இவனுக்கு ஏன் ஆயுத பூஜை?
தமிழன் விவசாய ஏர் முதல் வேல் வரை அக்கால நுட்பத்தில் பல விஷயங்களை சொன்னான், கப்பல் கட்டி கடல் கடக்கும் வித்தை வரை அவனுக்கு அத்துபடியாகியிருந்தது.
வான் சாஸ்திரம், கடல் சாஸ்திரம், மருத்து சித்த முறைகள் என எல்லாவற்றிலும் அவன் உயரவே இருந்தான்.
இந்திய தேசம் ஆரிய பட்டர், வராதமீகர், பாஸ்கரர், சீனிவாச ராமானுஜம் என எண்ணற்ற கணித மேதைகளை கொடுத்தது, இந்த விஞ்ஞான முன்னேற்றம் எல்லாம் அந்த மேதைகளின் பாதையில் வந்தது.
மென்மையான தங்க நகை முதல் முதல் மிக உறுதியான எக்கு செய்யும் நுட்பம் வரை இந்தியாவில் இருந்திருக்கின்றது.
அந்த நுட்பங்கள் ஐரோப்பாவிற்கு கடத்தபட்டபின்பே அவர்கள் பெரும் எந்திரங்களை செய்தனர்.
உலகில் ஏராளமான கருவிகள் படைக்கபட்டிருக்கலாம், ஆனால் அவற்றில் இந்தியரின் பங்கு இல்லை என எப்படி சொல்ல முடியும்?
குதர்க்கமும், குழப்பமும் நிறைந்த. எதனையாவது சொல்லி சமூகத்தில் அமைதி நிலவிவிடவே கூடாது என கொடிபிடிக்கும் கூட்டம் இம்மாதிரியான நல்ல நாட்களிலும் குதிப்பது வேதனை
ஒரு பெரியாரிஸ்ட் சொல்கின்றார் பெரியார் கேட்டாராம் ஆயுத பூஜையன்று விபச்சார தொழிலாளி என்ன பூஜை செய்வாள்?
இது பகுத்தறிவாம் , கர் த்தூ….
விபச்சாரிகள் உருவாவதில்லை, உருவாக்க படுகின்றார்கள். யாருக்காக உருவாக்கபடுகின்றார்கள் என்றால் நிச்சயம் ஆண்களுக்காக.
அம்மாதிரி சமூகத்தில் இருந்து கொண்டு சபிக்கபட்ட அந்த பெண்களிடம் பகுத்தறிவு பேசுவது பன்றிமூளைக்காரர்கள் செய்யும் செயல்.
இந்த பன்றிமூளைகள் அதனைத்தான் செய்கின்றன.
பெரியார் இம்மாதிரி எல்லாம் கேட்கவே இல்லை, பெண் விடுதலை வேண்டும், விபச்சாரிகளுக்கு வேறு வேலை கொடுக்கவேண்டும் என்ற ரீதியில் பேசினாராயன்றி இம்மாதிரி கேவலாமன ஆராய்ச்சியில் அவர் ஈடுபடவேயில்லை
இவர்களின் ஆராய்ச்சி சாக்கடை பன்றிக்கு பூனூல் போடுவது , விபச்சாரி எதனை வைத்து ஆயுத பூஜை செய்வாள் என சிந்திப்ப்பது என்ற அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது
இது பகுத்தறிவே அல்ல, மகா மட்டமான சிற்றறிவு, புல்லறிவு
இவர்கள் இந்த சமூகத்திற்கு ஆபத்தானவர்கள், இந்த ஆராய்ச்சி இன்னும் எதிலெல்லாம் தொடருமோ தெரியாது, ஆனால் ஒரு நல்ல விஷயத்தையும் கொடுக்காது என்பது மட்டும் உண்மை
பெரியாரை கேவலபடுத்த மற்றவர்கள் எதற்கு இவர்களே போதும். பெரியாருக்கு ஏதும் இவர்கள் செய்வதாக கருதினால், இப்படி அபத்தமாக பேசாமல் இருந்தாலே போதும்.