ஆய்வுக்கு சென்ற ஆளுநர் மீது பரபரப்பான குற்றசாட்டு

Image may contain: 2 people

“என்னது கைய பிடிச்சி இழுத்தியா?

என்னது வாய்க்கா பிரச்சினை?

திரும்ப திரும்ப பேசுறீர் நீர்..”


ஆய்வு சென்ற ஆளுநர் மீது பரபரப்பான குற்றசாட்டு வந்திருக்கின்றது

ஏற்கனவே சென்னா ரெட்டி என்றொரு ஆளுநர் சந்தித்த அவமானம் கொஞ்சமல்ல, மிக அபாண்டமான குற்றசாட்டு அது

இவர் இரண்டாவது குற்றசாட்டினை சுமக்கின்றார், நிச்சயம் இதுவும் அபாண்டமே. இதற்காக ஒரு ஆளுநர் அவ்வளவு தூரம் செல்வாரா?

திமுகவும், விசிகவும் போராட்டம் நடத்தும் வேளையில் இப்படி குற்ற்சாட்டு வந்திருப்பது யாருக்கு பாதகம் என சொல்லி தெரியவேண்டியதில்லை

என்ன இருந்தாலும் ஆளுநர் கவுரவமான பதவியில் இருப்பவர், இந்த அட்டகாச ஆட்சியினை கலைக்கும் சக்தி அவரின் விரலில் மட்டும் இருக்கின்றது

இப்படியாக எதிர்கட்சிகள் அவரை வெறுப்பேற்றினால் அவரின் மனம் ஆளும்கட்சிக்கு சாதகமாகவே மாறும்

முன்பே சொன்னதுதான், பழனிச்சாமி செய்ய வேண்டிய போராட்டத்தை எல்லாம் திமுக செய்கின்றது. பழனிச்சாமி மீது ஆளுநருக்கு நல்ல எண்ணம் வர , அந்த ஆட்சி நீடிக்க என்னென்ன காரியம் செய்யவேண்டுமோ அதையும் திமுகவே செய்கின்றது

ஆக பழனிச்சாமி அரசு மீது திமுகவிற்கு அவ்வளவு அக்கறை