ஆரியர் Vs பூரியர்

ஆரியர் என்றால் பிராமணர்கள், ஆரியம் என்றால் இனதுவேஷம் என சொல்லும் திராவிட கோஷ்டி எக்காலமும் உண்டு

ஆரியர் என்றால் உயந்தோர் என பொருள், அது ஞானத்திலும் அறிவிலும் சிறந்தோரையும் வீரத்திலும் சிறந்தோரையும் சொல்ல பயன்பட்ட சொல்

சங்க இலக்கியம் இருவகை ஆரியர்களை சொல்கின்றது, முதலாவது இயமலையில் ஆரியர்கள் இருந்தார்கள் என ரிஷிகளை சொல்கின்றது

இரண்டாவது வகை ஆரிய படை என்பது, அக்கால மன்னர்களிடம் இருந்த மிக சிறந்த தளபதிகள் வீரர்கள் அடங்கிய படை மிக உயந்த படை என்பதை குறிக்க ஆரிய படை என அழைக்கபட்டது

ஆரிய படைகள் என ஒரு குழு இருந்ததும் அவர்களுக்கு படை வீடுகள் எனப்படும் பாசறை இருந்ததும் வரலாற்று உண்மைகள், பெரிய வீடுகள் என்பதை உயர்ந்த காவல் உள்ள வீடுகள் என்பதை ஆரிய படை வீடுகள் என்றார்கள்

(ஆறுடை வீடு என முருகனின் சிறப்பு கோவில்கள் வந்தது அப்படியே, பின்னாளில் அது ஆறு எனும் எண்ணிக்கையை சொல்வது என திரிந்துவிட்டது )

இவ்வகை படைகளை வெல்வது கடினம், இதனாலே பாண்டியன் “ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்” என அழைக்கபட்டான், அவன் வரலாற்றில் ஆரிய படை வீடுகளை அழித்தான் என்றே சொல்லபடுகின்றது.

மற்றபடி பிராமண படையினை நெடுஞ்செழியன் அழித்தான் என்பதல்ல பொருள், பிராமணருக்கு அப்படி படையெல்லாம் இல்லை

ஆரிய எனும் சொல் தமிழ் சொல் அல்ல , அது உலக பொதுசொல்லாய் இருந்தது. தமிழ் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளுக்கு அது பொதுச்சொல்

மானிடன் எனும் தமிழ் சொல், சமஸ்கிருதத்தில் மனு என்றும் ஆங்கிலத்தில் மென் என அழைக்கபடும் பொதுசொல் போல உயர்ந்த எனும் அர்த்தம் கொண்ட “ஆரியம்” என்பது பொது சொல்லே

இதனாலே ஹிட்லர் தன்னை உயர்ந்த இனம் என சொல்லும் ஆரியன் என்றான், பாரசீகம் தங்களை உயர்ந்தவர்கள் என சொல்லி ஆரிய பூமி இது என சொல்லி “ஈரான்” என மாற்றிற்று

ஆப்கானிஸ்தானின் விமான நிறுவணம் பெயர் “ஆரியன்”

இப்படி ஆரியன் என்பது எல்லா மொழியிலும் உயர்ந்தோர் என பொருள்தருமே தவிர ஒரு சாதி என பொருள் தரவே தராது

இங்கு ஆரியம் உயர்ந்தது அது பிராமணியம் என சொல்லும் அந்த அரைவேக்காடு கும்பல் என்ன வாதம் செய்யும்?

ஆரியத்தின் எதிர்ப்பதம் திராவிடம் என அலறும்.

உண்மையில் திராவிடம் என ஒரு நாடோ இனமோ அதற்கொரு அரசனோ திராவிட இலக்கியம் என்றோ எதுவுமில்லை, ஏன் சங்க இலக்கியத்தில் கூட அப்படி “திராவிடம்” என்றொரு வார்த்தை இல்லை.

அப்படியானால் ஆரியம் எனும் வார்த்தையின் எதிர்ப்பதம் என்ன?,

சங்க தமிழ் அதற்கு “பூரியர்”

என்றொரு வார்த்தையினை சொன்னது, ஆம் பூரியர் என்றால் கீழானதை செய்வோர் என பொருள்
வள்ளுவன் தன் பாடலில் இப்படி சொல்கின்றான்

“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள”

அதாவது அருட்செல்வமே சிறந்த செல்வம், கீழான மக்களுக்கே பொருள் செல்வம் மேல் கண் இருக்கும் என்கின்றது குறள்

“வரைவிலா மாணிழையார் மென் தோள் புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு”

அதாவது வரையறை இல்லாமல் யாரையும் தழுவும் விலைமாதர் தோள்கள் என்பது கீழ்மக்கள் விழுந்து கிடப்பது நரகம் போன்றதாகும்.
இன்னும் பூரியர் எனும் வார்த்தையினை இப்படி விளக்குகின்றான் கம்பன்.

“ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பில
சோர்வில விளம்பு புள் துவன்றுகின்றது”

அதாவது அந்த அழகிய நீர்நிலை உயர்ந்த‌ பதினெட்டு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறாத கீழான அறிவுடைய புலவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து ஆரவாரம் செய்வது போல இரைச்சலாக இருந்தது

கம்பன் தெளிவாக சொல்கின்றான், பாரத கண்டத்தில் உயர்ந்த மொழிகளாக 18 இருந்தது, ஆம் இன்றும் செப்புமொழி 18 உடையாள் என பாரதியின் வரியினை படிக்கின்றோமே அப்படித்தான்.

இதில் திராவிட மொழி என எங்கே உண்டு? ஒரு காலமும் இல்லை

நாம் கம்பனையும் வள்ளுவனையும் ஒரு துணைக்கு அழைத்து “பூரியர்” எனும் வார்த்தையினை சொன்னோமே அன்றி இன்னும் ஏராள இலக்கியங்களில் இந்த வார்த்தை உண்டு

நற்றினையில் உண்டு, சீவக சிந்தாமணியில் உண்டு எங்கெல்லாமோ உண்டு

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே
வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே”

என கதறினான் பாரதி.

ஆக விஷயம் சொல்வது இதுதான்

ஆரியம் என்பது ஒரு இனத்தையோ ஒரு சாதியினையோ குறிப்பது அல்ல, அது பொதுபெயராய் இருந்தது
ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் என்றால் அவன் பிராமண படையினை கடந்தவன் என்றா பொருள்?
அப்படி பிராமணுக்கு அரசு இருந்ததா படை இருந்ததா? அவன் வாளெடுத்து வீசினானா இல்லை ஈட்டி எடுத்து குத்தினானா?

ஆரிய பிராமணன் கைபர் போலன் கணவாய் வழியாய் வந்தவன் என்றால் நெடுஞ்செழியன் என்ன ஆப்கனை கடந்து ரஷ்யா வரையா சென்றான்?

அல்ல, அவன் கடந்தது சோழ படை சாளுக்கிய படை போன்றவற்றையே, அங்கு ஏது பிராமண சேனை? அவர்களுக்கு ஏது ஆயுதம்?

ஆக ஆரியர் என்றால் பெரியவர், உயர்ந்தவர், குறைகாண முடியாதவர் எனும் பொதுவார்த்தை என்பது உறுதியாகின்றது

திராவிடம் என்பது இங்கு வந்தது கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர் காலமன்றி வேறு அல்ல, மார்க்ஸ்முல்லர் அங்கே குழப்பினான், கால்டுவெல் இங்கே குழப்பினான்

அவன் வழியில் திராவிட குஞ்சுகள் திராவிடம் என உளறிகொண்டிருக்கின்றன, திராவிடம் எனும் வார்த்தையே கிடையாது அதற்கு பொருளும் கிடையாது

அந்நியன் வந்து இங்கு மொழி இலக்கணம் எழுதினால் அதுவும் கிறிஸ்தவ வெறியன் எழுதினால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்

அவன் எழுதிதையும் நம்பி ஒரு சித்தாந்தம் ஒரு கட்சி அதற்கு ஆட்சி வேறு, எல்லாம் மோசடிகள்
ஆரியர் என்ற சொல்லுக்கான பொருளையும் அதன் எதிர்பதமான பூரியர் என்பதையும் சொல்லியாயிற்று
ஆரியருக்கு எதிர்ப்பதம் பூரியர் என்பது தமிழில் மட்டுமல்ல பல மொழிகளில் உண்டு,

ஆங்கிலத்தில் இன்றும் ஸ்பூரியஸ் (Spurious = false, fake, illegitimate, fool) என்று வழங்கப்படும்
ஆக இனி அந்த கழகம் பூரியர் கழகம்,

அந்த கட்சி பூரியர் முன்னேற்ற கட்சி எனும் பூ.மு.க

அது ஆரியம் எனும் உயர்ந்த மக்களை தேசாபிமானிகள் சனாதான தர்ம ஞானிகளை எதிர்த்து கீழ்மக்களால் உருவான கட்சி என்பதை அவர்களே திராவிடம் என பொய்யான வார்த்தையால் ஒப்புகொள்கின்றார்கள்

அதை உண்மையான வார்த்தைபடுத்தினால் கீழான மக்கள் என்றே பொருள்வரும், அவ்வகையில் அது சரியே.


தாங்கள் பூரியர் இல்லை என்றால் ஆரியர் என்றே அழைத்து கொள்ளட்டும் யாருக்கும் சிக்கல் இல்லை.

அவர்கள் தமிழ் உணர்வு மிக்கவர்கள் என்றால் தமிழுக்காய் தண்டவாளத்தில் படுத்தவர்கள் என்றால் தமிழுக்காய் அந்நிய தீவின் தீவிரவாதிகளையும் ஆதரிப்பவர்கள் என்றால் தூய தமிழில் தங்களை “பூரியர்” என அழைக்கட்டும்

அது அல்லாமல் இல்லா திராவிடம் என சொல்லிகொண்டிருந்தால் அவர்களுக்கு தமிழ் உணர்வே இல்லை என பொருள்.
அவர்களுக்கு தமிழ் உணர்வு இல்லாவிட்
டால் என்ன? நமக்கு உண்டல்லவா?

இதனால் அவர்களை இனி “பூரியர்கள்” என்றே அழைக்கலாம், அதுதான் மிக சரியான தமிழ்பற்று