ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டி: தீபா
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டி: தீபா
அத்தையின் வீடோ, சொத்தோ வேண்டாம். அத்தையின் தொகுதியும் கட்சியும் போதும் என்ற கொள்கையுடன் களமிறங்குகின்றார் தீபா
பாஜக சார்பில் தமிழிசை களமிறங்குகின்றாராம், பாஜகவின் ஆசிபெற்ற தீபா நிற்கும்பொழுது தமிழிசை ஏன்?
நாளை தீபா பாஜகவில் சேர்ந்துவிட்டால் தன் இடம் பறிபோய்விடும் என்ற அச்சமாக இருக்கலாம்
திமுக பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என செய்திகள்
பொதுவாக இடைதேர்தலில் ஆளும் கட்சியே வெல்லும், இம்முறை வரலாறு திரும்ப பெரும் வாய்ப்பபு இருக்கின்றது
ஆனாலும் கொடுத்து வைத்த மக்கள் அந்த தொகுதிமக்கள், ஜெயா வெற்றிபெற நன்கு கவனிக்கபட்டார்கள், இனி சசிகலா அணி வெற்றிபெற இவர்கள் 4 வருடத்திற்கு வேலைவெட்டிக்கே செல்லாத அளவு வளம் பெற போகின்றார்கள்
கூவத்தூர் ஸ்டைலில் இனி அவர்களுக்கு ராஜமரியாதை
நமக்கும் ஒரு தொகுதி இருக்கின்றது, என்ன பிரயோஜனம்?
ஆர்.கே நகர் தொகுதியினை பார்த்து ,பெருமூச்சு விட்டுகொண்டு நகரவேண்டியதுதான்
கொசுறு
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பில் அநீதி, இந்தியர்கள் மீது தாக்குதல், மோடி மெளனம் காப்பது ஏன்? : ஆந்திர, தெலுங்கானா எம்பிக்கள் கடும் அமளி
அவரா? சிங்களன் சுட்டதற்கே வாய்திறக்கவில்லை, இவர் அமெரிக்கன் சுட்டதற்கா வாய்திறப்பார்?
குஜராத் கலவர சர்ச்சைகள் , விசா தடைகள் எல்லாம் நீங்கி இப்பொழுதுதான் அமெரிக்காவிற்கு 4 முறை சென்றிருக்கின்றார், இன்னும் செல்வார்
அதனை கெடுக்க சொல்கின்றார்களா?
கண்டித்துவிட்டு விசா மறுபடியும் தடை என்றால் அவர் எப்படித்தான் அமெரிக்கா செல்வது?