ஆறுமுக நாவலர் பைபிளை முதலில் தமிழ்படுத்தினாரா?

இதோ பாருங்கள், பைபிளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் ஆறுமுக நாவலர் என சொ

ல்வதெல்லாம் சரி அல்ல‌

தமிழில் பைபிள் வரவேண்டும் என ஆசைபட்டவர் முதன் முதலில் வந்த பிரான்சிஸ் சவேரியார் எனும் துறவி அவர் 15ம் நூற்றாண்டுக்காரர், தட்டுதடுமாறி தமிழ்படித்து சில பைபிள் வரிகளை சொல்லிகொடுத்தார், பரலோக மந்திரம் அவர் சொல்லிகொடுத்தது

இந்த் தோமையார் எனும் தாமஸ் சென்னைக்கு வரவில்லை பரங்கிமலை அவர் வந்த இடமல்ல என ஏன் அடித்து சொல்கின்றோம் என்றால் அவர் பைபிளை கொண்டே வரவில்லை

நிச்சயம் அவர்காலத்தில் பைபிள் இல்லைதான், அப்போஸ்தலர் பணி எல்லாம் நடந்திருக்கவில்லைதான் , ஆனால் சில குறிப்புகளாவது கொண்டு வந்திருக்கமாட்டாரா?

குறைந்தது பத்து கட்டளை? குறைந்தது இயேசு கற்பித்த ஜெபம்?

உண்மையில் தோமா வந்தால் அதை செய்யாமல் இருந்திருப்பானா? ஆனால் 15ம் நூற்றாண்டுக்கு முன்பு எங்கே இருந்தது அந்த பிரார்த்தனை?

அதனால்தான் அடித்து சொல்கின்றோம் தாமஸ் வந்தது என சொல்லபடுவது பொய், அவர் பரங்கிமலையில் கொல்லபட்டு சாந்தோமில் அடக்கம் செய்யபட்டார் என்பது பொய்

காரணம் கர்த்தர் கற்பித்த ஜெபமே இங்கு பிரான்சிஸ் சவேரி காலத்தில்தான் 15ம் நூற்றாண்டில் வந்தது

பின் 16ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் வந்தார், முடிந்தவரை ஓலைசுவடிகளில் ஏதோ செய்தார்

பின் அச்சுமுறை வந்தது , ஜெர்மனி அதை செய்தது ஜெர்மானியரான சீசன் பால்க் அந்த எந்திரத்தோடு டச்சுக்கார மிஷனரியாக தரங்கம்பாடி வந்தார்

அது 17ம் நூற்றாண்டு, அவர்தான் பைபிளை தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர்

ஆறுமுக நாவலர் 18ம் நூற்றாண்டுக்காரர், சீசன் பால்குவுக்கு பின் 100 ஆண்டு கழித்து வந்தவர்

விஷயம் என்னவென்றால் நாவலர் இலங்கையில் பைபிளை தமிழ்படுத்திய முதல் நபர் அவ்வளவுதான்

ஆறுமுக நாவலர்தான் பைபிளை முதலில் தமிழ்படுத்தினார் என்பது, இயேசு ஆடுமேய்த்தார் என “பூவே உனக்காக” படத்தில் விக்ரமன் எழுதிய பைத்தியக்கார வசனம் போன்றது