ஆறு, குளங்களை கடவுளாக நினைத்து காக்க வேண்டும் : கமலஹாசன்
ஆறு, குளங்களை கடவுளாக நினைத்து காக்க வேண்டும் : கமலஹாசன்
கங்கை நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நேற்று வாரனாசியில் நடந்தது : இன்னொரு செய்தி
ஆக இரு கோஷ்டியும் ஒன்றாகத்தானே பேசிகொண்டிருக்கின்றீர்கள், பின் ஏன் அவர் மீது வழக்கு?
இங்கு ஏறகுறைய தினமும் மழை பெய்கின்றது, சில நேரம் அடைமழை கொட்டுகின்றது
(தமிழகம் போல விடுமுறை விடுகின்றார்களா என்றால் இல்லை, மழை அவர்களை பாதிப்பதே இல்லை அந்த அளவுக்கு வடிகால் வசதிகள் வைத்திருக்கின்றார்கள்)
என்ன நாடு இந்த மலேசியா? மழைபெய்தால் விடுமுறை விடவேண்டாமா? தமிழகத்தில் அதனைத்தான் செய்கின்றார்கள்
மழையில் வேலைக்கு செல்லவேண்டும் என கிளம்பும்பொழுதெல்லாம் அந்த தமிழகம்தான் நினைவுக்கு வருகின்றது
எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் தமிழகத்தார்? மிக பொறாமையாக இருக்கின்றது
தமிழக அரசியலில் ஒரு சென்டிமெண்ட் உண்டு, எல்லா பெரும் அரசியல்வாதிகளும் மருத்துவ சிக்கலை கடந்துதான் உச்சம் அடைந்திருக்கின்றார்கள்
கலைஞர், ராமசந்திரன், முன்பே விபத்தில் சிக்கிய ஜெயலலிதா என எல்லோரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்தபின்பே உச்சம் தொட்டார்கள்
கண் திருஷ்டி அப்படி கழிந்தது என்பது தமிழக சென்டிமென்ட்
அப்படி எங்கள் தலைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவருக்கான கண் திருஷ்டி கழிந்துகொண்டிருக்கின்றது
இனி திரும்பவரும் தலைவி அரசியலில் மிகபெரும் சக்தியாக வருவார் என்பதில் சந்தேகமே இல்லை