ஆளுநரே வந்தபின்னும் அங்கு வராத முதல்வர் எதற்கு?

குமரி மாவட்டமே கதறி அழுதுகொண்டிருக்கும் பொழுது இங்கே முதல்வர் கண்டுகொள்ளாமல் இருந்தால் மக்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்

ஆச்சரியமாக மத்திய அரசும், ஆளுநரும் அங்கே சென்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கும்பொழுது தமிழக முதல்வரை காணவில்லை

இதில் மத்திய அரசின் நிலை குறைசொல்லமுடியாதது, தன் உரிமையினை கேட்டு பெறவேண்டிய மாநில அரசு மீதே சர்ச்சை

குமரிமாவட்டத்தில் சில பாதிரிகள் ஊர்வலம் சென்றதாக தகவல்கள் வந்தது

புயல் பொதுவான அழிவு, இதில் கிறிஸ்தவர்கள் மட்டும் பாதிக்கபட்டார்கள் என அந்த பங்கு தந்தைகள் களத்திற்கு வருவது சரியல்ல, எல்லா மக்களும் பாதிக்கபட்டார்கள்

உடனடி உதவிகளிலும் , உணவு போன்ற உதவிகளிலும் பங்கு தந்தைகள் ஈடுபடலாம் வாழ்த்துகுரியது மற்றபடி ஏ அரசாங்கமே என கிளம்புவது, அதுவும் மத்திய அரசு பிரதிநிதிகள் களத்தில் இருக்கும்பொழுது ஒரு மாதிரியான பிளவுகளை ஏற்படுத்துவது சில சிக்கல்களுக்கு வழிவகுக்கும்

கிறிஸ்தவர் என்பதால் இந்து அரசு புறக்கணிக்கின்றது எனும் குரலை எழுப்பவே விட கூடாது. அப்படி எல்லாம் இங்கு நடக்கவே இல்லை. மாநில அரசை நிச்சயம் சாடலாம்

ஆனால் அதனை செய்யாமல் நேரடியாக மத போர்வைக்குள் ஓளிவது சூழ்ச்சிமிக்க சுயநலம்

ஒரு மாதிரியான சர்ச்சைகள், முணுமுணுப்புகள் வருகின்றன, இதனை முளையிலே கிள்ள வேண்டும்.

இது கிறிஸ்தவ இந்து கலவரங்களாக மாறாமல் பார்த்துகொள்ளும் வாய்ப்பு எல்லா தரப்புக்கும் உண்டு

மண்டைக்காடு கலவரங்களும் இன்னும் பல மத விஷயங்களும் மறக்க கூடியவை அல்ல‌

மத்திய அரசு பாதுகாப்புதுறை அமைச்சரையே அனுப்பி நிலவரத்தை கவனிக்கத்தான் செய்கின்றது, மாநில அரசு என்ன கிழித்தது?

இதை சொல்லாமல் வீணாக குதிப்பது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது

தமிழக அரசு இன்னமும் உறங்கிகொண்டிருந்தால், மத்திய அரசு அந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஆட்சியினை எடுத்துகொள்வது நல்லது

மக்கள் கதறிகொண்டிருக்கும்பொழுது, ஆளுநரே வந்தபின்னும் அங்கு வராத முதல்வர் எதற்கு?

மக்களின் அமைதியினை விட, காணாமல் போனோரை கண்டுபிடிப்பதை விட , கலவரங்களை தடுப்பதை விட பழனிச்சாமி அரசு ஒன்றும் மகா முக்கியம் அல்ல‌