ஆளுநரை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கின்றது..

“தமிழ்நாட்டை நினைத்தாலே தலை சுற்றுகின்றது,சமாளிக்க முடியவில்லை 2 மாதமாக படும் பாடு கொஞ்சமல்ல
எப்படி எல்லாம் கிளம்புகின்றார்கள், விட்டால் பைத்தியம் ஆக்கிவிடுவார்கள் போல
நொடிக்கொருமுறை டெல்லிக்கு போன் செய்து நான் சரியாக இருக்கின்றேனா , சரியாக பேசுகின்றேனா என கேட்டுகொண்ட இருக்கும் அளவிற்கு என் நிலமையினை ஆக்கிவிட்டார்களே…
தலையினை பிய்க்க தோன்றுகின்றது. இனி தியானம் இல்லாமல் வாழமுடியாது, தொடங்கிவிட்டேன்
அந்த புத்தர் கோலத்தில் ஒரு சிந்தனை உதிக்கின்றது, இரட்டை இலையிலை பிய்த்து ஆளுக்கொரு இலை கொடுத்து அனுப்பி விட வேண்டியதுதான்.
எப்படியும் போய் தொலையட்டும், நம்மை விட்டால் சரி
என்னா குழப்பம்..என்னா வில்லத்தனம்? அம்மாடி..
அந்த அம்மா இப்படி யோசித்து யோசித்துதான் செத்திருக்கும் போல…”
ஆளுநரை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கின்றது..