ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?, பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம்

இந்த நிம்மி ஆண்டி சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யபடுகின்றனர், அப்படி நிம்மிக்கு உதவினார் என இன்னொரு பேராசிரியரும் கைதாகி இருக்கின்றார் அவர் பெயர் முருகன்

முருகன் மாணவிகளுக்கு போன் எல்லாம் செய்யவில்லை என்றாலும், நிம்மிக்கு உதவினார் என விசாரிக்கின்றார்கள்

முருகனின் மனைவி கொதிக்க தொடங்கிவிட்டார், யாரையோ பாதுகாக்க தன் கணவனை பலிகொடுக்கின்றார்கள் விடமாட்டேன் என பொங்கிவிட்டார்

கண்ணகி பிறந்த மண் என்றால் சும்மாவா?

அம்மணி கேட்கும் கேள்வி நியாயமானது, என் கணவர் சாதரண பதவியில் இருப்ப்பவர், ஆனால் கவர்னன் முன்னால் நிம்மியினை அனுமதித்தது யார் என்கின்றார்

நியாமான கேள்வி

கவர்னரோ நிம்மி முகத்தை கூட நான் பார்த்ததில்லை என்கின்றார்,

ஆனால் அவர் கவர்னருடன் மேடையில் தான் இருந்ததை நிம்மிய்யே ஆடியோவில் சொல்லியிருக்கின்றார்

இந்த விவகாரத்தை கையில் எடுக்கின்றார் முருகன் மனைவி

இதை எதிர்பார்த்தாரோ என்னமோ, கவர்னர் நேற்றே சூரியனை மேகம் மூடும் என தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டார்ர்

விஷயம் சுழன்றடிக்கின்றது, கவர்னர் மேடையில் நிம்மியினை அனுமதித்தது யார் என்பதுதான் இப்பொழுது மில்லியன் டாலர் கேள்வி?

அவரை ஏன் விசாரணை கமிஷன் நெருங்கவில்லை என்பது பில்லியன் டாலர் கேள்வி..