ஆஹா.. காந்தி மகான்…

ஆஹா.. காந்தி மகான்..

1942ல் இதே நாளில் காந்தி கடும் சிறைதண்டனை பெற்றார்

அதாவது “வெள்ளைனே வெளியேறு” என பெரும் போராட்டம் அறிவித்தற்காக அவர் சிறைவைக்கபட்டார்

அதற்காக அவர் கடும் சிறையில் “பாம்புகள் பல்லிகள்” இடையே சிறைவைக்கபட்டார் என எண்ணிவிட கூடாது, புனேயில் ஆகா கான் எனும் சுல்தான் இருந்தான் அவனுக்கொரு அரண்மனை இருந்தது

அந்த அரண்மனையில் சகல வசதிகளுடன், அவருக்கு வேலையாட்கள், பால் கொடுக்க ஆடுகள், பணிவிடை செய்ய சேவகர்கள், காந்தி எழுத பேனா பேப்பர்கள், அவர் நூல் நூற்க ராட்டைகள் பஞ்சுகள், அவர் தோளில் கைபோட்டு நடக்க பெண்கள் என சகல வசதிகளுடன் தங்கவைக்கபட்டார்

இதன் பெயர் சிறைவாழ்வு

வ.உ.சி சிறையில் ரத்தம் வழிய வழிய சணல் பிழிந்தார், சாக்கு ஆடை உடுத்தி செக் இழுத்தார், அவருக்கு கூழ் தான் வழங்கபட்டது அதிலும் புழுக்கள் இருந்தன‌

சாவர்க்கர் அந்தமான் தனி சிறையில் கடும் சித்திரவதைக்கு ஆளானார்

சுப்பிரமணியம் சிவாவுக்கு தொழுநோய் வருமளவு கடும் சிறையில் சித்திரவதையில் இருந்தார்

இன்னும் எவ்வளவோ தேசபோராளிகள் தனி சிறையில் அந்தமானிலும் நாடெங்கும் வாடி வதங்கி செத்தனர் சிலர் நடைபிணமாய் மீண்டனர்

ஆனால் காந்திக்கு அரச மாளிகையில் சிறை, நேருவுக்கும் அப்படியே மாளிகை சிறை கூடுதலாக வெளிநாட்டு பயண அனுமதி வேறு

வ.உ.சி செக் இழுத்தார், சாவர்க்கர் கல் உடைத்தார்

ஆனால் காந்தியும் நேருவும் பக்கம் பக்கமாக அந்த உல்லாச சிறையில் எழுதி குவித்தார்கள்

வரலாற்றில் எழுதபட்ட மோசடிகளில் முதன்மையானது காந்தி சிறையில் வாடினார் என்பது, ஒரு காலமும் அவர் வாடவில்லை உல்லாசமாகத்தான் இருந்தார்

சரி, விவசாயிகளுக்காக அரை ஆடைதான் அணிவேன் என சொன்ன காந்தி, ஏன் சாதாரண கைதிகளுடன் சிறைக்கு செல்லமால ஆகாகான் மாளிகையில் புகுந்தார்?

அதுவும் இஸ்லாமியன் மாளிகையில் புகுந்தார்?

அதுதான் காந்தி, பின்னாளில் பாகிஸ்தானை பெற்றுகொடுத்த பாகிஸ்தானின் தேசதந்தையான காந்தி மஹானின் குணம்,

அவர் அப்படித்தான்