ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்”

Image may contain: 1 person, close-up

இந்த ஆ.ராசா வெளிவந்து “2ஜி அவிழும் உண்மைகள்” என‌ புத்தகம் எல்லாம் எழுதியிருக்கின்றாராம்.

நீதிமன்றமே இவர் குற்றவாளி இல்லை என சொன்னபின் இவர் எழுத என்ன உண்டு? நீதிபதியின் தீர்ப்பே ஒரு புத்தகம்தானே

ஏதோ காந்தியும், நேருவும் சிறையில் இருந்துவந்து எழுதியது போல, அந்தமான் சிறைகொடுமைகளை தியாகிகள் எழுதியது போல எழுதி வைத்திருக்கின்றார்

சரி அவர் எழுதட்டும், அவருக்கும் நெஞ்சுக்கு நீதி எழுத ஆசை வந்துவிட்டது

ஆனால் வெளியீட்டு விழாவில் என்ன பேசினார் என்றால், இவர் மன்மோகனிடம் போய் கடுமையாக சண்டை போட்டாராம், அவர் இவரிடம் என்னை மன்னியுங்கள் என மூன்றுமுறை மன்னிப்பு கேட்டாராம்

வழக்கு என்பதும் இவர் விடுவிக்கபட்டதும் வேறு

ஆனால் மன்மோகன் மன்னிப்புகேட்டார் என இவர் அவிழ்த்துவிடுவது நிச்சயம் ஏற்புடையது அல்ல‌

மன்மோகன் சிங் அப்படி சொன்னதுமில்லை, சொல்வதாக இருந்தால் மறைப்பவருமில்லை

அதுவும் மூன்றுமுறை மன்னிப்பு கேட்டாராம்.

இதற்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து உரிய பதிலை பெற்றுகொடுப்பது தமிழக காங்கிரசின் கடமை

இல்லையென்றால் சோனியா நான் கோபபட்டவுடன் 3 நாள் உண்ணாவிரதம் இருந்து அழுதார், ராகுல் என்னை மன்னித்துவிடுங்கள் இல்லாவிட்டால் செத்துவிடுவேன் என விஷத்தோடு காலில் கிடந்தார் என்றெல்லாம் இவர்கள் அள்ளிவிடுவார்கள்