இங்கிலாந்தில் இரு இந்தியருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் பிரதமர் தெரசா மே

இங்கிலாந்தில் இரு இந்தியருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் பிரதமர் தெரசா மே : செய்தி

இதுபற்றி ஒரு தும்பியிடம் , அது எப்படி லண்டனில் இந்தியன் ஆளலாம், லண்டன்காரன் அல்லவா ஆளவேண்டும் என தும்பியிடம் கேட்டோம்

தும்பி இப்படி சொல்லிற்று

“அண்ணே மண்ணின் மைந்தன் மண்ணை ஆளனும், அங்கே பாருங்கள் தெரசா மே அமைச்சரவையில் இந்தியர் இருக்கலாம், அப்படி சைமன் முதல்வரானால் ரஜினி அமைச்சராக இருக்கலாம். அவர் தலைனாக கூடாது என்பதுதான் கொள்கையே தவிர வந்தேறி அமைச்சர் ஆகலாம்

ஓஹோ நேரத்திற்கு ஏற்ப கொள்கை மாறும் போல‌

டெபனட்லி அண்ணே

ரஜினி அமைச்சர் பதவிக்கு உங்ககிட்ட வரணுமா?

ஹிஹிஹிஹி நாங்க தமிழர்ணே, நாங்கதான் ஆளுவோம் ஆனால் அவர் எங்களுக்கு வோட்டு கேட்டா தடுக்க மாட்டோம், அமைச்சர் பதவி கொடுப்போம்

அட பாவிகளா, வோட்டு வாங்க இப்படி ஒரு ஐடியவா, அவர் வோட்டு வாங்கி உங்களுக்கு தரணுமா? ஏன் நீங்களே வாங்க கூடாதா?

ஹிஹிஹி யாரும் வோட்டு போடலண்ணே, அவர் வந்தாலாவது 4 வோட்டு கிடைக்கும்ணே, அதுக்குதாண்ணே இவ்வளவு டிராமா”