இங்கிலாந்தில் தற்கொலை தாக்குதல் : 20 பேர் பலி

இங்கிலாந்தில் தற்கொலை தாக்குதல் 20 பேர் பலி, சற்றுமுன் சம்பவம்

தீவிரவாதம் எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை லண்டன் உணரும் தருணமிது

உலகின் எல்லா தீவிரவாத இயக்கங்களும் முன்பு அடைக்கலமானது லண்டனில்தான், அவர்கள் போராளிகள் என லண்டனும் சேர்த்துகொள்ளும்

காலிஸ்தான் தீவிரவாதிகள் முதல் புலிகளின் கிட்டு, பாலசிங்கம் எல்லாம் அடைகலமானது அங்குதான்.

அங்கிருந்துதான் உலகெல்லாம் தீவிரவாதத்திற்கு கட்டளைகள் பறந்தன, தங்கள் நாட்டில் பிரச்சினை செய்யாமல் அடுத்த நாட்டில் செய்வதை லண்டனும் ரசித்தது

உலகில் தீவிரவாதம் வெகு வேகமாக வளர்ந்ததற்கு லண்டனும் ஒரு காரணம்..

அங்கிருந்துகொண்டுதான் ஈழத்திலும், தமிழகத்திலும் புலிகள் செய்த அட்டகாசத்திற்கு அறிக்கை வாசித்தார்கள், காலிஸ்தான் இயக்கத்திற்கும் லண்டன் கொடுத்த உதவி கொஞ்சமல்ல‌

இன்று அந்த கொடூர குட்டிசாத்தான் எப்படி ரத்தம் குடிக்கும் என்பதை லண்டன் இப்பொழுது பார்க்கின்றது

கொஞ்ச காலத்திற்கு முன்புதான் அங்கு பாராளுமன்ற தாக்குதல் நடந்தது, ஆனால் இந்த அளவு சேதமில்லை, லண்டன் அவசரநிலையில் இருக்கின்றது,

இத்தாக்குதலில் கொல்லபட்ட 20 பேருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி இரங்கலும், இந்த கோழை செயலுக்கு கண்டனமும் தெரிவிக்கின்றார்

இனியாவது லண்டன் திருந்தட்டும்…

“பிறர் கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா தாமே வரும்”