இங்குள்ள யதார்த்தம் அது

அந்த நீதிபதி ஓபி ஷைனி என்பவரை ஆளாளுக்கு விமர்சிக்கின்றார்கள்

நாட்டில் நேர்மையான நீதிபதிகளில் அவரும் ஒருவர், கனிமொழிக்கும் ஆ.ராசாவுக்கும் ஜாமீன் மறுத்தவர் அவர்தான்

ஆனால் விடுதலை செய்தவரும் அவர்தான்

இப்பொழுது கோகாய் விவகாரத்திலும் அவரை இழுக்கின்றார்கள்

நீதிபதிகள் எவ்வளவு நேர்மையாய் இருந்தாலும் அவர்களுக்கும் சில கட்டுபாடுகள் உண்டு சாட்சியும் ஆதாரங்களும் வலுவாக வேண்டும்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட அந்த தீர்ப்பின் வரிகளை இப்படித்தான் எழுதினார் ஷைனி “சிபிஐ தகுந்த ஆதாரங்களை சமர்பிக்க தவறியதால் கனிமொழியும் ஆ.ராசாவும் விடுவிக்க படுகின்றார்கள்”

மனிதன் எனும் படத்தில் ஜட்ஜாக வரும் ராதாரவி பாத்திரம் மிக அழகாக இந்த உண்மையினை சொல்லும் இப்படியாக‌

“இது கோர்ட், நான் ஒரு நீதிபதி எனக்கு தேவை வலுவான ஆதாரமும் தகுந்த சாட்சியும். அது இல்லாமல் நான் என்ன தீர்ப்பு சொல்லமுடியும்?”

ஆம் நீதிபதிகள் சரியாக இருந்தாலும் சாட்சிகளையும் ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதையும் குழப்பி அடித்தால் எந்த வழக்கிலும் யாரும் தப்பலாம்

இங்குள்ள யதார்த்தம் அது