“இங்கு அரசியல் பேசாதீர்”

சில டீக்கடைகளில் எழுதியிருப்பார்கள் இப்படியாக‌ “இங்கு அரசியல் பேசாதீர்”

உலக வரலாற்றிலே முதன் முறையாக அதை தமிழக விமான நிலையங்களில் இனி எழுத வேண்டிய காலம் வந்தாயிற்று

பொது போக்குவரத்து இடங்களில் அரசியல் பேசுவது சரி அல்ல, பேச வேண்டுமென்றால் பிரச்சாரத்திற்கு வரும்பொழுது பேசலாம் இல்லாவிட்டால் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் சட்டையினை இழுத்து பிடித்து கேட்கலாம்

அப்படி சோபியா கேட்டிருக்க வேண்டியது தூத்துகுடியில் இருக்கும் திமுக, அதிமுக அரசியல்வாதிகளையே

மாறாக பார்த்துவிட்டார் என்பதற்காக “ஏ தமிழிசையே ஏ பாஜக பாசிசமே ..” என்பது மூளைசலவை செய்யபட்ட ஒருவரின் குரல்

நிச்சயம் இதற்கு ஒரு முடிவு கொடுக்கபடவேண்டும், சோபியாவுக்கு விடபடும் எச்சரிக்கை மொத்த தமிழகத்திற்குமான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் ரயில், பஸ், விமான நிலையம் போன்ற பொதுபோக்குவரத்து எல்லாம் அரசியல் கோஷங்களால் நிறைந்து நாசமாகும்

வாக்களிப்பது ஜெயலலிதாவிற்கும் கலைஞருக்கும் ஆனால் அடிப்பது தமிழிசையினை என்றால் அது என்ன வகை நியாயமோ?

இப்பொழுது நிலமை சரியில்லை என்றால் பழனிச்சாமி கார் முன்பாவது கத்த வேண்டும் அதுவுமில்லை

எது எப்படியோ விமான நிலையங்களில் “இங்கு அரசியல் பேசினால் 1 ஆண்டு சிறை” என்ற அறிவிபினை வைத்து உலகிற்கு வழிகாட்ட போகின்றது தமிழகம்

திராவிட புரட்சி என்பது இதுதான்