ரஜினி மற்றும் இங்கொன்றும் அங்கொன்றும்……

Image may contain: 2 people

ஜெயா இருக்கும் வரை அமைதி காத்துவிட்டு இப்பொழுது கள் குடித்த குரங்காக உளறிகொண்டிருக்கும் ரஜினியினை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது சீமான் கூட கிள்ளி விளையாடுகின்றார் ஆத்தா பல பேர் மரியாதையினை காத்துத்தான் வந்திருக்கின்றது, ரஜினி உட்பட‌


அன்புமணி, சீமான், ஸ்டாலின் , திருமா என வரிசையாக சொன்ன ரஜினி, சரத்குமார், கார்த்திக் பற்றி சொல்லாமல் போனதையும் அப்படியே வைகோ, மாதவன், தீபா, வீரலட்சுமி பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் போனதை பற்றியும் வன்மையாக கண்டிக்கின்றோம்

தமிழிசை, பொன்னார் பற்றியும் ரஜினி ஒன்றும் சொல்லவில்லை

குஷ்பூ பற்றி அவர் ஒன்றும் சொல்லமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும், அதற்கொரு தகுதி வேண்டும்

அது தன்னிடம் இல்லை என ரஜினி தெரிந்திருக்கும் வரை நல்லது..


23 வருடம் கன்னடராக இருந்தேன், 44 வருடங்களாக தமிழனாக இருக்கிறேன்: ரஜினி

இனி இந்திக்காரராக மாறபோகின்றாரோ?

இவர் கன்னடராக, தமிழனாக இருப்பதில் என்ன சிக்கல்? நம்பிக்கையற்ற, உறுதியற்ற குழப்பவாதியாக இருப்பதுதான் சிக்கல்..

ஒரு சூப்பர் ஸ்டார் , பவர் ஸ்டார் ஆகிகொண்டிருக்கின்றார்..


அமெரிக்க ஐடி வேலையும், அரேபிய வீட்டுவேலையும் ஒன்றுதான் : ஐடி ஊழியர்கள் புலம்பல்

அமெரிக்கா கொஞ்சமாவது பராவாயில்லை, அந்த நண்பர்களுக்கு ஜப்பானியர், சீனருடன் செய்யும் வேலைகள் பற்றி தெரியாது போலும்

அது அரேபிய வீட்டு ஒட்டகங்களை மேய்பதை விட கடுமையானது


 ஒரு ஐ.டி. ஊழியர் கூட பணி நீக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

அரசா? அதுவே ஏக சிக்கலில் இருக்கின்றது, மிக குறைந்த சம்பளத்தையே சரியாக கொடுக்கமுடியாமல் அதன் பலதுறைகள் சீரழிந்து கிடக்கின்றது

இதில் பெரும் தொகை வாங்கும் ஐடி ஊழியர்களுக்கு அரசு என்ன செய்யமுடியும்?

கன்றுகுட்டியினை வளர்க்கவே வழியில்லா அரசிடம், அங்கே யானைக்கு உணவில்லையென்றால் நீதான் பொறுப்பு என்றால் எப்படி?

இந்த மக்கள் டிவியில் வேலைபார்த்துவிட்டு ராஜினாமா செய்தவர்களுக்கு எல்லாம் அரசுதான் முன்பு வேலைகொடுத்ததா?


கங்கையைச் சுத்தப்படுத்த மக்கள் பணத்தை மத்திய அரசு கோடிக் கோடியாகக் கொட்டி அழலாமா? : கி.வீரமணி

இப்பொழுது இவருக்கு என்ன வந்தது? பெரியாரின் சொத்துக்களை கொண்டு கூவத்தை சுத்தபடுத்த யாரும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் வந்திருக்கலாம்..