இணைந்த கைகள் இணந்ததாகவே இருக்கட்டும்
கடந்த 50 வருடத்தில் ஒரு பகுதி போரின் விளிம்பிற்கு சென்றுவிட்டு அமைதியாகின்றது என்றால் கொரியபகுதிதான்
வடகொரிய அதிபர் முதன் முறையாக எல்லை தாண்டி தென்கொரியா சென்றிருக்கின்றார், அவர்களும் அன்போடு வரவேற்றிருக்கின்றார்கள்
இனி கொரியாவில் போர் இல்லை, போரில் பிரிந்த குடும்பம் இணையலாம், எல்லை நெருக்கடிகள் தளத்தபடும் என இருவரும் கூட்டாக அறிவித்தபொழுது மக்களின் ஆனந்தம் சொல்லிமாளாது
இரு நாடுகள் பிரிக்கபட்டிருக்கும் பொழுது எல்லை மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. இதில் இந்தியாவின் பஞ்சாப் பகுதி படும் சிரமம் கொஞ்சமல்ல
உறவுகள் கோட்டுக்கு அப்பக்கமும் இப்பக்கமும் பிரிந்து கிடக்கும், நல்லது கெட்டதிற்கு என்றாலும் விசா சோதனை இன்னும் ஏகபட்ட கெடுபிடி உண்டு
சாககிடக்கும் உறவை கூட பார்க்கமுடியாது, அது போர்க்காலம் என்றால் சாத்தியமே இல்லை
அந்த வலிகள் அனுமதித்தால் மட்டுமே புரியும், கொரியர்கள் அனுபவித்தவர்கள் என்பதால் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள்
அத்தோடு இல்லாமல் இனி விளையாட்டு போட்டியில் ஒரே கொரியாவாக பங்குபெறுவோம் என்றிருக்கின்றார்கள்
முத்தாய்ப்பாக அணு ஆபத்து இல்லா பகுதியாக கொரிய பகுதியினை அறிவித்தாயிற்று, இது நிச்சயம் பெரும் வரலாற்று திருப்பம்
கொரிய பகுதியில் வடகொரியா தன் பங்கினை செய்தாயிற்று, இனி தென்கொரியாவில் இருக்கும் அமெரிக்க படைகள் கிளம்ப வேண்டுமா? வேண்டாமா?
ஆனால் அவ்வளவு எளிதில் கிளம்பாது
நல்ல முயற்சி நடக்கின்றது, அந்த அமெரிக்க வல்லரசு குட்டையினை குழப்பாதவரை கொரியர்கள் சந்தொஷம் நீடிக்கும்
உலகம் முழுதும் இருந்து வடகொரியாவிற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன, ஜப்பான் நேசகரம் நீட்டுகின்றது
ஒரு முரடன் திருந்தும்பொழுது எத்தனை ஆயிரம் முகங்கள் சந்தோஷத்தால் நிரம்புகின்றன என்பதை உலகம் பார்த்துகொண்டிருக்கின்றது
பலத்த நிம்மதி கிழக்காசியாவில் திரும்பியிருக்கின்றது, இது தொடரட்டும், நிலைக்கட்டும்
இரு கொரியாக்களும் இன்னும் நெருங்கி ஒன்றாக இணையட்டும், அமைதி நங்கூரமாய் நிலைக்கட்டும்
இணைந்த கைகள் இணந்ததாகவே இருக்கட்டும்
மனிதன் இணைத்ததை கடவுள் பிரிக்காதிருக்கட்டும்