இதற்கா உயிர்நீத்தான் மாவீரன் அழகுமுத்துகோன்
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின், 307வது பிறந்த தினம் கொண்டாடபடுவதையொட்டி தூத்துகுடியில் 144 தடை உத்தரவு
எப்படிபட்ட கொடுமை பார்த்தீர்களா?
ஒரு சுதந்திரபோராட்ட வீரனின் பிறந்த நாளை, இச்சுதந்திர நாட்டில், சுதந்திரமாக கொண்டாட முடியாமல் சாதிவெறி ஆட்டி படைக்கின்றது
அந்நியருக்கு எதிராய் மகா வீரத்துடன் போரடிய மாவீரனை ஏதோ வெங்கடேஷ பண்ணையார், பசுபதி பாண்டியன் அளவில் கொண்டு நிறுத்தியிருக்கின்றது சாதி வெறி
இது வெட்கபடவேண்டிய விஷயம், இதற்கா உயிர்நீத்தான் அந்த மாவீரன்?
2006ம் ஆண்டு இதே நாளில் மும்பை ரயில்களில் குண்டு வெடித்து ஏற்பட்ட உயிர்சேதமும் பாதிக்கபட்ட குடும்பங்களும் கொஞ்சம் அல்ல,, ஏராளம்
தீவிரவாதத்தை கருவருப்போம் என இந்தியர் வைராக்கியமாக இருக்க, இந்த நாளினை நினைவு கூறல் வேண்டும்
அதுவும் தீவிரவாத எதிர்ப்பு நாட்களில் ஒன்றே, தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் வேரறுப்போம்