இதுதான் தமிழக பத்திரிகை தர்மம்

கியா கார் கம்பெனியினை தொடர்ந்து , சில ஐடி கம்பெனிகளும் தமிழகத்திலிருந்து நடையினை கட்டுகின்றார்கள், அரசுக்கு அவற்றை பிடித்துகொள்ளும் ஆர்வம் இல்லை

அவை வெளியேறினாலும் கொஞ்சமும் தமிழக அரசு வருத்தபட்டதாகவும் தெரியவில்லை

சேகர் ரெட்டியின் டைரியில் தமிழக அமைச்சர்களின் ஜாதகமே அடங்கி இருக்கின்றன என செய்திகள் வருகின்றன, தமிழகம் வரலாறு காணா சிக்கலில் சிக்கியிருக்கின்றது

எங்கும் ஊழல், எங்கும் திகைப்பு, என்ன நடக்கின்றது? என்ன ஆகபோகின்றது தமிழகம் என்ற ஒரு மாதிரி பெரும் குழப்பம் நீடிக்கின்றது

மணல் கொள்ளை, தாது மணல், கிரானைட் முதல், செம்மரம் வரை நடந்திருக்கும் கொள்ளைகள் இந்திய பட்ஜெட்டையே மிஞ்சும் வகைகளாக தெரிகின்றன‌

இதனை எல்லாம் எழுதாத பத்திரிகைகள், அவ்வளவு ஏன்? அஞ்சுகிராமம் பக்கம் 4 முதிர்வயது பெண்களை கொன்றிருக்கின்றோம் என ஒரு பதின்ம வயது கும்பல் சொன்னபின்னும் அதனை பற்றி எழுதாத பத்திரிகைகள்..

குஷ்பூ டிவிட்டரின் என்ன சண்டை போடுகின்றார் என எழுதுகின்றன அல்லவா?

இதுதான் தமிழக பத்திரிகை தர்மம்..