இதுதான் புலனாகா ஏவுகனை தத்துவம்
1985 வரை உலகில் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் இருந்தது. இருவருமே மகா அபயகரமான ஆயுதங்களை தயாரித்திருந்தார்கள், அவை பேரழிவு மிக்கவை
பின் சோவியத் உடைந்து ரஷ்யாவுடன் அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் எல்லாம் போட்டாலும், இன்றுவரை இருவரிடம் உள்ள ஆயுத கணக்கு விவரம் முழுமையாக தெரியவில்லை
கொஞ்சகாலம் அமைதியாயிருந்த இருவரும் மறுபடி நவீன ஆயுத போட்டிக்கு வந்துவிட்டார்கள்
அதாகபட்டது மேற்கே ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகளை அமெரிக்கா வளைத்து ஏவுகனை உபகரணங்களை நிறுத்த முனையும் வேளையில் , கிழக்கே வடகொரியாவினை வைத்து ரஷ்யா ஆடும் ஆட்டம் எல்லோருக்கும் தெரிந்தது
இப்பொழுது புட்டீனின் அறிவிப்பு வந்து உலகை கலக்குகின்றது
ரஷ்யா பார்வைக்கோ, ரேடாருக்கோ புலப்படாத ஏவுகனைகளை தயாரித்துவிட்டது என அவர் சொல்லியிருப்பது மகா கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது
பார்வைக்கு புலனாகாது என்றால் அதிவேகம் அல்ல, மாறாக பார்க்கவே முடியாது
ஒளி ஒரு பொருளின் மீது பட்டு அது எதிரொளித்து நம் கண்ணுக்கு வந்தால் மட்டுமே அதை நாம் பார்க்க முடியும். இரவில் நாம் தடுமாறுவது இப்படித்தான்
அனுப்பும் ரேடார் அலைகள் பட்டு திரும்பிவந்தால்தான் விமானமோ, ஏவுகனையோ வருவதையோ ரேடாரால் உணரமுடியும்
தன்மீது படும் எல்லா கதிர்களையும் ஏவுகனை கிரகித்துகொண்டு திரும்பி அனுப்பாவிட்டால் யார் பார்க்கமுடியும்? எந்த ரேடார் கண்டுபிடிக்க முடியும்?
இதுதான் புலனாகா ஏவுகனை தத்துவம்
இதனை எங்கிருந்து பெற்றார்கள் என்றால் விண்வெளியில் நட்சத்திரங்கள் செத்து இறுகி கருந்துளை ஆகி தன் மீது விழும் எல்லாவற்றையும் விழுங்கி ஒளிபட்டால் கூட அதன் கதிர்களை விழுங்கி பார்க்கமுடியாமல் இருக்குமே அந்த தத்துவம்
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகை கலக்க, ஏவுகனை தெரியாது சரி ஆனால் அதன் புகை வெளிவருமே அதை மறைப்பீர்களா என உலகம் கேட்க, எவ்வளவோ செய்யும் ரஷ்யர்கள் அதனை யோசிக்கமாட்டார்களா? என்கின்றது ரஷ்யா
அமெரிக்கா இதனை கேட்டு இது ஒப்பந்தத்திற்கு எதிரானது என்கின்றது
இப்பொழுது ஏன் ரஷ்யா திடீரென இதனை அறிவிக்க வேண்டும்?
சிரியாவில் சில நவீன ஏவுகனைகளை அமெரிக்கா சோதித்தது என்கின்றார்கள், ரேடாரில் சிக்கா ரகம் அது
சிரியாவில் நிற்கும் ரஷ்யாவிற்கு இது புலபட்டிருக்கலாம், பாம்பின் கால் பாம்பரியும்
சில நாட்களாக உலகெல்லாம் ரஷ்யா சிரியாவில் கொல்கின்றது என்ற பிரச்சாரமும் ரஷ்யாவிற்கு கோபத்தை வரவழைக்க , புட்டீன் தங்கள் பலத்தினை சொல்லிகொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது
அமெரிக்காவிடமும் அப்படி ஏவுகனைகள் இருக்கலாம் என்பது தியரி
எப்படியோ புட்டீன் அறிவித்ததும் இஸ்ரேலும் அப்படி தயாரிக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தாயிற்று, சீனா எப்படி காப்பியடிக்கலாம் என திட்டம் தீட்ட ஆரம்பித்தாயிற்று
நிச்சயம் இம்மாதிரி ஏவுகனைகள் பேராபத்து, அதாவது தாக்கும் பகுதியினை உணர்ந்து சம்பந்தபட்ட மக்களை காப்பாற்றகூட முடியாது
ஆளில்லா விமானம் போய் இனி பார்க்கமுடியா விமானங்களும் இதே பாணியில் வரலாம்
உலகம் இப்படிபட்ட செய்திகளை கேட்டு கலங்கிபோய் இருக்கின்றது, ஆனால் இப்படியான பார்வைக்கு தெரியா ஏவுகனை என்ன? விமானமே இந்தியாவிடம் உண்டு
ஆம், இந்திய அரசு பல ரபேல் விமானங்களை வாங்கியதாக சொல்கின்றது ஆனால் எவ்வளவு தேடிபார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது, அதோ பறக்கின்றது என சொன்னாலும் நாம் பார்க்கமுடியாது
உருப்படியாக வாங்கி வந்து நிறுத்தி பின் பறக்கவிட்டால் தானே நாமெல்லாம் பார்க்க முடியும்? இல்லாவிட்டால் எப்படி?
இனி நாங்கள் பார்வைக்கு தெரியா விமானங்களை வைத்திருக்கின்றோம், உங்கள் கண்ணுக்கு தெரியாது என இந்திய அரசு சொல்லலாம், அதனையும் பக்தர்கள் நம்பிகொள்வார்கள்.